கொன்றவப் பூதி
தன்பால் கோன்செட்டிப் பட்டந் தன்னை
மன்றுலாந் தொங்கல் வேந்தன் வணிகனுக் கீந்து சொன்னான்.
(இ-ள்.) என்றலும்
- என்று அரசன் சொல்லவும், தேவி -
இராமதத்தா தேவி, வென்ற -
ஜெயித்த, வாதிதன் -
வழக்காளியினுடைய, பக்கத்தார்போல் - கக்ஷியிலுள்ளவர்களைப்போல,
நெஞ்சில் - மனதில், உவகை - சந்தோஷம்,
நிறைந்தனளாக -
நிறையப்பெற்றவளாக, நின்றனள் - நின்றாள், நீதி - நீதியை, கொன்ற
- கெடுத்த, அப்பூதி தன் பால் - அந்த ஸ்ரீ பூதியினிடத்துள்ள, கோன்
செட்டிப்பட்டந் தன்னை - இராஜஸ்ரீஷ்டி பட்டத்தை, மன்றுலாம் -
வாசனை பரவிக்கொண்டிருக்கின்ற, தொங்கல் - புஷ்பமாலையை
யணிந்த, வேந்தன் - அரசன், வணிகனுக்கு - பத்திரமித்திரனுக்கு,
ஈந்து - கொடுத்து, சொன்னான் - (மேலும் அவனை
நோக்கிக்
கீழ்க்கண்டவாறு) சொல்லினான், எ-று. (89)
313. மணிகளும் பொன்னும் முத்தும் வயிரமும் பிறக்கும் பூமி
மணிகளும் பொன்னும் முத்தும் வயிரமு மடக்கு மாடம்
மணிகளும் பொன்னும் முத்தும் வயிரமும் வடித்துச்
செய்த
வணிகளும் துகிலும் சந்து மல்லவுங் கைக்கொ ளென்றான்.
(இ-ள்.) மணிகளும்
- இரத்தினங்களும், பொன்னும் -
ஸ்வர்ணமும், முத்தும் - முத்துக்களும்,
வயிரமும் -
வஜ்ஜிரரத்தினங்களும், பிறக்கும் - உண்டாகும், பூமி - பூமிகளையும்,
மணிகளும் - இரத்தினங்களையும், பொன்னும் - ஸ்வர்ணத்தையும்,
முத்து - முத்துக்களையும், வயிரமும் - வஜ்ஜிரக்
கற்களையும்,
அடக்கும் - தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்ற,
மாடம் -
உப்பரிகை பாண்டாகார முதலானவைகளையும்,
மணிகளும் -
இரத்தினங்களாலும், பொன்னும் - ஸ்வர்ணத்தினாலும், முத்தும்
-
முத்துக்களாலும், வயிரமும் - வஜ்ஜிரரத்தினங்களாலும்,
வடித்துச்
செய்த - ஆராய்ந்தெடுத்துப் பதித்து வடிவுபெறச் செய்த, அணிகளும்
- ஆபரணங்களையும், துகிலும் - பட்டு வஸ்திரங்களையும், சந்தும் -
சந்தன முதலாகிய வாசனதிரவியங்களையும்,
அல்லவும் -
இவையல்லாதனவாகிய மற்ற அனேக இனிய வஸ்துக்களையும்,
(திருடர்களையேவி மந்திரியால் அபகரிக்கப்பட்ட
உன்னுடைய
பொருள்கள் எல்லாவற்றையும்), கைக்கொள்
- நீ
கைக்கொள்ளக்கடவாய், என்றான் - என்று ஆஜ்ஞாபித்துத்
தன்
காரியஸ்தர்களைக் கொண்டு அவற்றையெல்லாம் அவனுக்குக்
கொடுக்கும்படி செய்தான், எ-று. (90)
வேறு.
314. இடம்பெரி துடையவர் பழியில் காரியந்
தொடங்கிய முடித்தலால் விடார்க ளென்பது
மடங்கல்போ னின்றிந்த வணிகன் மந்திரி
இடஞ்சலைக் கடந்திது முடிந்த தென்றனர். |