பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 147


 

வரும்  -  நினைத்தற்கரிய,   பெரிய   -  பெரியதாகிய,  செல்வம் -
மந்திரியின்   செல்வமெல்லாம்,  நினைப்பதன்  முன்னம் - அவ்வாறு
அழிக்க  எண்ணுவதற்கு  முந்தியே,  நீறாய் - பஸ்பமாகி,  (அதாவது
ஒன்றுமில்லாமல்),  பனியின்  முன்  -  பனியினது எதிரில், மலர்ந்த -
புஷ்பித்த,   செந்தாமரைத்தடம்   போன்றது    -   சிவந்ததாமரைத்
தடாகத்துக்குச் சமானமானது, எ-று.                         (95)

 319. மலைமிசைச் சிங்க வேற்றை வருத்துமான் கன்று போலத்
     தலைமிசைச் சவட்டையிட்டுச் சரணகந் தீற்றி யிட்டார்
     புலையர்சென் றவனைச் சூழ்ந்து போகென வுரைப்பச் சுற்ற
     மலைகடற் கவிழ நாவா யவருற்ற துற்ற தன்றே.

     (இ-ள்.) (மேற்கூறியபடி சூழ்ந்தவர்கள்) மலைமிசை - பருவத்தின்
மேலே,  சிங்க  ஏற்றை - ஆண்சிங்கத்தை, வருத்தும் - வருத்துகின்ற,
மான்கன்றுபோல  -  மான்  குட்டிகைளைப்போல,  சவட்டையிட்டு -
சவட்டையடித்து,  தலைமிசை - அவனது  தலையின்மேல், சாணகம் -
சாணிக்குழம்பை, தீற்றியிட்டார் - ஊற்றினார்கள்,(அதன்மேல்) புலையர்
- கீழ்மக்கள்,  சென்று  -  சமீபத்திற்  சென்று, அவனைச் சூழ்ந்து -
அவனை   வளைந்து,  போகென   -   நீ   இந்நகரத்தை  விட்டுப்
போகக்கடவாயென்று,  உரைப்ப   -   சொல்ல,  (அவன் அவ்வாறே
சென்றான்; அப்போது) சுற்றம் - அவனுடைய பந்துக்கள், அலைகடல்
- அலைகளையுடைய  சமுத்திரத்தில்,   நாவாய்  -  கப்பல், கவிழ -
கவிழ்ந்துபோக, அவர்  -  கப்பலிலுள்ளவர்கள்,  உற்றது - அடைந்த
துன்பத்தைப்போன்ற  துன்பத்தை, உற்றது  -  அடைந்தார்கள், எ-று.

    ‘போகென" என்பதில் அகரந் தொக்கது.                  (96)

 320. முன்பகற் றேவ னென்று மொய்த்துடன் புகழப் பட்டான்
     பின்பகற் பேய னென்று பின்செலா திகழப் பட்டான்
     அன்புறு மிளமை மூப்பி லரிவையர்க் கொருவ னொத்தான்
     முன்புதான் செய்து வந்த விதிமுறை யுதயத் தாலே.

    (இ-ள்.)  (அப்போது)  முன்பு - பூருவத்தில், தான் செய்துவந்த -
தன்னால்   செய்யப்பட்டு   வந்த,  விதிமுறை   -  விதிக்கிரமத்தின்,
உதயத்தாலே   -   தோற்றத்தினாலே,   முன்பகல்   -   காலையில்,
(இராஜசபைக்குப்    போகும்போது),    தேவனென்று   -   இவனே
தெய்வமென்று,     மொய்த்து    -    ஜனங்கள்   நெருங்கி, உடன்
அப்பொழுதே,    புகழப்பட்டான்    -    அவர்களால்     புகழ்ச்சி
செய்யப்பட்டவனாகிய   மந்திரி,    பின்பகல்   -    அம்மாலையில்,
பேயனென்று  -  பேய்க்குச்  சமானமானவன் (அதாவது  புத்தி நிலை
இல்லாதவன்)  என்று,  பின்  -  அவனுக்குப்  பின்னே,  செல்லாது -
ஒருவருஞ் செல்லாமல், இகழப்பட்டான் - அவர்களாவிகழ்ச்சி பண்ணப்