326. மோக மேநிறை யாநிறை யாயது
மோக மேமூ வுலகின் வலியது
மோக மேமுனி மைக்கிடை யூறது
மோக மில்லவர் நல்ல முனிவரே.
(இ-ள்.) மோகமே - ஆசையே,
நிறையா - ஒருகாலும் நிரம்பாத,
நிறையாயது - அளவையுடையது, மோகமே - ஆசையே, மூவுலகின் -
மூன்றுலோகத்திலும், வலியது - பலம் பொருந்திய பொல்லாங்கினை
யுடையது, மோகமே - ஆசையே, முனிமைக்கு -
முனீஸ்வரர்
தன்மையினுக்கு, இடையூறது - விக்கின காரியாயிரா
நின்றது,
மோகமில்லவர் - ஆசையில்லாதவர்கள், நல்ல - நன்மையையுடைய,
முனிவரே - முனிசிரேஷ்டர்களாவார்கள், எ-று. (103)
327. மேகம் வில்லொடு வீந்தது போலவே
போக மும்கிளை யும்பொரு ளுங்கெடச்
சோக மும்துய ரும்துணை யாகவன்
னேக நின்றவ ரின்ன வியம்பினார்.
(இ-ள்.) (இது நிற்க)
மேகம் - மேகமானது, வில்லொடு -
இந்திரதனுசோடு, வீந்ததுபோல - அழிந்து மறைந்து போவதுபோல,
போகமும் - தனது போகமும், கிளையும் - பந்துக்களும், பொருளும்
- ஜஸ்வரியமும், கெட - நீங்க, சோகமும் -
மனோவருத்தமும்,
துயரும் - துன்பமும், துணையாக - தனக்குத் துணையாகச்
சேர,
அவன் - அம்மந்திரியானவன், ஏக - (மேற்கூறியபடி) பட்டணத்தை
விட்டுப்போக, நின்றவர் - அக்காலத்தில் நின்ற ஜனங்கள், இன்ன
-
இத்தன்மையான வார்த்தைகளையே, (அதாவது மேற்கவிகளிற்
சொன்னவைகளை), இயம்பினார் - சொன்னார்கள், எ-று.
ஆகவன் என்பதில் அகரந்தொக்கது.
(104)
328. அங்கு நின்றவ னேகலு மாயிடைச்
சங்கை தன்முறை யென்று தழுவலு
மெங்கும் வந்திரு ளாய திடர்க்கட
னுங்கி னானொடி யும்நெடி தாயதே.
(இ-ள்.) (அதன் மேல்
முன் கூறியபடி துரத்தப்பட்டு) அங்கு
நின்று - அந்நகரத்தினின்றும், அவன் - அம்மந்திரியானவன், ஏகலும்
- நீங்கிப்போதலும், ஆயிடை -
அப்பொழுது, சங்கை -
மனச்சங்கையானது (அதாவது பயமானது), தன்முறை என்று
-
அவனிடத்தே நீங்காமல் இருக்கவேண்டியது தன்னுடைய முறமை
என்று, தழுவலும் - அவனிடத்தே வந்து சேர்தலும், எங்கும் வந்து - |