150மேருமந்தர புராணம்  


 

 326. மோக மேநிறை யாநிறை யாயது
     மோக மேமூ வுலகின் வலியது
     மோக மேமுனி மைக்கிடை யூறது
     மோக மில்லவர் நல்ல முனிவரே.

     (இ-ள்.) மோகமே - ஆசையே, நிறையா - ஒருகாலும் நிரம்பாத,
நிறையாயது - அளவையுடையது, மோகமே - ஆசையே, மூவுலகின் -
மூன்றுலோகத்திலும்,  வலியது - பலம்  பொருந்திய பொல்லாங்கினை
யுடையது,   மோகமே  -  ஆசையே,  முனிமைக்கு   -  முனீஸ்வரர்
தன்மையினுக்கு,   இடையூறது   -   விக்கின  காரியாயிரா  நின்றது,
மோகமில்லவர்  -  ஆசையில்லாதவர்கள், நல்ல - நன்மையையுடைய,
முனிவரே - முனிசிரேஷ்டர்களாவார்கள், எ-று.               (103)

 327. மேகம் வில்லொடு வீந்தது போலவே
     போக மும்கிளை யும்பொரு ளுங்கெடச்
     சோக மும்துய ரும்துணை யாகவன்
     னேக நின்றவ ரின்ன வியம்பினார்.

     (இ-ள்.)  (இது   நிற்க) மேகம்  -  மேகமானது,  வில்லொடு -
இந்திரதனுசோடு,  வீந்ததுபோல  -  அழிந்து மறைந்து போவதுபோல,
போகமும்  -  தனது போகமும், கிளையும் - பந்துக்களும், பொருளும்
- ஜஸ்வரியமும்,  கெட  -  நீங்க,  சோகமும்  -  மனோவருத்தமும்,
துயரும்  -  துன்பமும், துணையாக  -  தனக்குத்  துணையாகச் சேர,
அவன்  -  அம்மந்திரியானவன், ஏக - (மேற்கூறியபடி)  பட்டணத்தை
விட்டுப்போக, நின்றவர்  -  அக்காலத்தில் நின்ற ஜனங்கள், இன்ன -
இத்தன்மையான    வார்த்தைகளையே,   (அதாவது   மேற்கவிகளிற்
சொன்னவைகளை), இயம்பினார் - சொன்னார்கள், எ-று.

     ஆகவன் என்பதில் அகரந்தொக்கது.                   (104)

 328. அங்கு நின்றவ னேகலு மாயிடைச்
     சங்கை தன்முறை யென்று தழுவலு
     மெங்கும் வந்திரு ளாய திடர்க்கட
     னுங்கி னானொடி யும்நெடி தாயதே.

     (இ-ள்.) (அதன்  மேல்  முன்  கூறியபடி துரத்தப்பட்டு) அங்கு
நின்று - அந்நகரத்தினின்றும்,  அவன் - அம்மந்திரியானவன், ஏகலும்
- நீங்கிப்போதலும்,     ஆயிடை    -    அப்பொழுது,   சங்கை -
மனச்சங்கையானது  (அதாவது   பயமானது),   தன்முறை   என்று -
அவனிடத்தே  நீங்காமல்  இருக்கவேண்டியது  தன்னுடைய  முறமை
என்று, தழுவலும் - அவனிடத்தே  வந்து சேர்தலும், எங்கும் வந்து -