பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 151


 

அதனால்    அவனுக்கு    எவ்விடங்களினும்   வந்து    (அதாவது
பொறிபுலன்களிலெல்லாம்   சேர்ந்து),   இருளாயது   -  அந்தகாரம்
நிறைந்துவிட்டது, (அதாவது அஞ்ஞானமாகி விட்டது அங்ஙனமாகவே
அவன்),   இடர்க்கடல்  -  துக்கமாகிற சமுத்திரத்தில், நுங்கினான் -
முழுகினான்,  நொடியும்  -  ஒரு  நொடிப் பொழுதும், நெடிதாயது -
அவனுக்கு நீண்டகாலமாகத் தோற்றியது, எ-று.

     சங்கை என்பதனை மூதேவி என்றும் சிலர் கூறுவர்.      (105)

 329. மதலை மாடமும் மன்னிய செல்வமுங்
     குதலை மென்மொழி யாரையும் நீத்தவன்
     விதலை கொண்டு விழுந்தனன் வேந்தன்மேல்
     முதல தாகிய வேரம் முளைத்ததே.

     (இ-ள்.) (அவ்வாறாகவே) மதலை - துண்களையுடைய, மாடமும்
- மாளிகையையும்,    மன்னிய    -   சேர்ந்திராநின்ற, செல்வமும் -
ஐஸ்வரியத்தையும்,   குதலை   -   மழலை   பொருந்திய,   மெல் -
மிருதுவாகிய,       மொழியாரையும்      -      வசனத்தையுடைய
ஸ்திரீமார்களையும்,    நீத்து   -   நீங்கி,  அவன்   -  அம்மந்திரி,
விதலைகொண்டு   -   நடுக்கங்கொண்டு,   விழுந்தனன் - மூர்ச்சித்து
விழுந்தான், (அப்பொழுது) முதலதாகிய - அவனுக்கு முதன்மையாகிய,
வேரம்  -  வைரபாவமாகிய  அனந்தானு  பந்திக்குரோத  பரிணாமம்,
வேந்தன்மேல்   -   அரசன்பேரில்,   முளைத்தது   -  தன் மனதில்
பாவகர்மமாக   உண்டாகி   அதனால்   திரவியகர்மம் ஆத்மனோடு
பந்தித்தது, எ-று.                                        (106)

 330. என்று தானிவை யெய்துவ தென்றெழா
     நின்ற வார்த்தத்தி னீடிய வாயுளுங்
     குன்ற வந்து விலங்கினு ளாயுக
     மன்று கட்டிய தாயுவு மற்றதே.

     (இ-ள்.) (மேலும் அவனுக்கு) என்று தான் - எப்பொழுது தான்,
இவை   எய்துவது   -   நாம்    அடைந்திருந்த   இத்தன்மையான
ஐஸ்வரியங்களை  அடைவது, என்று - என்று, எழாநின்ற - மனத்தில்
உண்டாகாநின்ற,     அர்த்தத்தின்    -     இஷ்ட     வியோகாதி
ஆர்த்தத்தியானத்தால்,     நீடிய    -    பெரிதாகிய,  ஆயுளும் -
மனுஷ்யாயுஷ்யமும், குன்ற - குறைய,  விலங்கினுள் ஆயுகம் வந்து -
திரியக்கதியாயுஷ்யமானது   ஆஸ்ரவித்து,   அன்று  - அப்பொழுது,
கட்டியது - அவனைப்  பந்தித்தது,  ஆயுவும் - மனுஷ்யாயுஷ்யமும்,
அற்றது (அவனுக்கு) நீங்கிவிட்டது, எ-று.                    (107)

வேறு.

 331. மிக்கு நின்றெறி விளக்கு வீந்துழி
     அக்க ணத்திரு ளடையு மாறுபோல்