பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 153


 

 334. அளவிலா நிதியை விட்டுப் பிறன்பொரு ளதனை மேவல்
     களவுதா னிரண்டு கூறா மியல்புகா ரணங்க டம்மா
     லளவிலாப் பொருளுண் டாயும் பிறன்பொருட் கிவற லாதி
     களவுதான் கடைய தாகுங் கைப்பொரு ளற்ற வர்க்கே.

     (இ-ள்.)   (மனிதர்)  அளவிலா  -  அளவில்லாத,   நிதியை -
ஐஸ்வரியத்தை,  விட்டு - தம்மிடமிருக்க  அதை வைத்துவிட்டு, பிறன்
பொருளதனை  -  அன்னியனது   திரவியத்தில்,  மேவல்  -  மனம்
பொருந்துதல்,  களவு - ஸாமான்னியத்தால்  களவென்றாகும், தான் -
அக்களவுதான்,     இயல்பு   காரணங்கள்    தம்மால்   -   காரிய
காரணங்களினால், இரண்டு  கூறாம் - காரியக் களவென்றும் காரணக்
களவென்றும்   இரண்டு    விதமாகும்,   (அவற்றுள்),   அளவிலாப்
பொருளுண்டாயும்        -       கணக்கிலாத       பொருள்கள்
தமக்குண்டாகியிருந்தும்,    பிறன்   பொருட்கு  -  அன்னியனுடைய
திரவியத்திற்கு,  இவறல் - இச்சிக்கின்றது, ஆதி - முதலிற் கூறப்பட்ட
காரியக்  களவாகும், கைப்பொருள் - தம் கைப்பொருள், அற்றவர்க்கு
- இல்லாதவர்களாகிய  தரித்திரர்களிடத்தி  லுண்டாகும், களவுதான் -
களவானது,  கடையதாகும்  -  இரண்டாவதாகிய காரணக் களவாகும்,
எ -று.                                                 (111)

 335. இயல்பினாங் களவி னார்கட் கினியவாஞ் செய்கை யொன்று
     முயலுறா மனத்த ராகி வாங்குவ நிறைய வாங்கிக்
     குயலராய்க் கொடுப்ப வெல்லாங் குறையவே கொடுத்த லாகு
     முயலுறா ரிவைசெய் யாதே யொருபக லொழிய மேலும்.

     (இ-ள்.)   இயல்பினாங்  களவினார்கட்கு   -   காரியக்களவை
யுடையவர்களுக்கு,  இனியவாம்  -  இனிமையாகிய, செய்கை ஒன்றும்
- செய்கைகளில்   ஒரு   காரிய   மேனும்,   (அதாவது   நீதியோடு
பொருந்திய   காரியங்களில்   ஒன்றையேனும்),  முயலுறா  -  செய்ய
முயற்சிக்காத,  மனத்தராகி  -  மனத்தையுடையவர்களாகி  (அதாவது
அநீதி   பொருந்திய  மனமுடையவர்களாகி),  வாங்குவ  -  தாங்கள்
வாங்குமவைகளை   எல்லாம்,   நிறைய   -   அதிகமாக,  வாங்கி -
கிரகித்து,   குயலராய்  -  லோப  புத்தியுடையவர்களாய்,   கொடுப்ப
எல்லாம்  -  தங்களால்   கொடுக்கப்படும்  பொருள்களை  எல்லாம்,
குறையவே  -  குறைவாகவே, கொடுத்தலாகும்  -  கொடுத்தல் உரிய
தொழிலாகும்,   இவை  செய்யாதே  -  இப்படிப்பட்ட காரியங்களைச்
செய்யாமல்,  ஒரு  பகலொழிய  -  ஒரு நாளாகிலும் நீங்க, மேலும் -
மேலே,   (அதாவது   மேலும்  வேறே  காரியங்களில்),  முயலுறார் -
முயற்சி  செய்யமாட்டார்கள்,  (அதாவது  ஒரு  நாளேனும்  தவறாமல்
தினந்தோறும் மோசத் தொழில்களையே புரிவர்), எ-று.          (112)