156மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  ஆதலால்  -  ஆகையினாலே, களவது - திருடானது,
ஆகாயாவர்களாலும் செய்யவும் விரும்பவும் தகாதது,  இருமைக்கும் -
இம்மைமறுமை இரண்டிலும்,  தீதெலாம் - பொல்லாங்குகளை எல்லாம்,
ஒருமை  யொக்க - ஒன்றாகப்பொருந்த,  ஆக்குமென்று - ஆக்களவு
செய்விக்குமென்று, தேறும்,  தெளியும் படியான, நல் - நன்மையாகிய,
அறத்தை  -  தருமத்தை,  செப்பும்   சொல்கின்ற,  பூதிதான்  -  ஸ்ரீ
பூதிமந்திரியானவன்,   ஆதியாய  -  இருவகைகளில்  முதலாவதாகிய,
களவினை  -  காரியக்களவை,  பொருந்தி  -  சேர்ந்து,  பொல்லா -
பொல்லாங்காகிய,  நீதியால் - தனது நீதியினால், அமைச்சு - மந்திரித்
தனத்தையும்,  நீங்கா   -   நீங்கி,  செல்வமும்  - ஐஸ்வரியத்தையும்,
கிளையும் - பந்துக்களையும், நீத்தான் - இழந்தான், எ-று.       (117)

 341. மந்தரி வடிவை யெல்லாம் மன்னவன் மனத்திவ் வாறு
     சிந்தியா வியந்து நோக்கா தேறுவ தாரை யென்னா
     அந்தணன் றமிலன் றன்னை யவன்பதத் தமைச்ச னாக்கி
     மந்திரம் போல நின்று மண்ணினைத் தாங்கு மன்னோ.

     (இ-ள்.) (அதன்மேல்) மந்திரி - மந்திரியினது, வடிவை எல்லாம்
- கபட  ஸ்வரூபத்தை  எல்லாம்,  மன்னவன்  -  அரசன், மனத்து -
மனதில், இவ்வாறு - இந்தப் பிரகாரம், சிந்தியா - சிந்தித்து, வியந்து -
ஆச்சரியமடைந்து, யாரை - இனி எவர்களை, தேறுவது - மந்திரியாகத்
தேர்ந்தெடுப்பது,  என்னா  -  என்று, நோக்கா - ஆராய்ந்து பார்த்து,
அந்தணன்   -   பிராமணனாகிய,   தமிலன்றன்னை   -   தர்மிலன்
என்பவனை,    அவன்   பதத்து   -   அந்த   ஸ்ரீ  பூதிபதத்திலே,
அமைச்சனாக்கி   -   மந்திரியாக  ஸ்தாபித்து,   மந்தரம்   போல -
மகம்மேரு பர்வதத்தைப்  போல,  நின்று - நடு நிலையில் சலனமின்றி
நின்று,  மண்ணினை  -  பூமி  இராஜ்ஜியத்தை,  தாங்கும்  -  தரித்து
நடத்துபவனாயினான், எ-று.                                (118)

 342. திரைசெறிந் திலங்கு மாழிப் படிமன்னன் றேவி யோடு
     முரைசெறிந் திலங்குங் கீர்த்தி யுவகையி னோடச் செம்பொன்
     வரைசெறிந் திலங்குந் திண்டோள் வணிகன்மற் றொருநாள் வாடா
     விரைசெறிந் திலங்க திங்க வனஞ்சென்று விரகிற் புக்கான்.

     (இ-ள்.)  (இவ்வாறு) திரை  -  அலைகள்,  செறிந்து - சேர்ந்து,
இலங்கும்   -   விளங்கும்,   ஆழி  -  சமுத்திரஞ்  சூழ்ந்த,  படி -
பூமியையாளும்  படியான,  மன்னன் . அரசன், தேவியோடும் - தனது
தேவியுடன்,  உரை  செறிந்து  -  உலகத்தார் வசனங்களிற்  சேர்ந்து,
இலங்கும்  -  விளங்குகின்ற, கீர்த்தி  -  புகழோடும்,  உவகையின் -
சந்தோஷத்தோடும், ஓட - நீதி  மார்க்கத்தில் செல்லுகின்ற காலத்தில்,
செம்பொன்வரை  -  மகம்மேரு பர்வதம்போல்,  செறிந்து - சேர்ந்து,
இலங்கும்  -  விளங்குகின்ற,  திண்டோள்  -  வலியதோளையுடைய,
வணிகன் - பத்திரமித்திர  ஸ்ரீஷ்டியானவன், ஒருநாள்  - ஒருதினம்,
வாடா - குறையாத, விரை - வாசனை, செறிந்து