பூங்குழலி யோங்கிய வதிங்கவனம் புக்கு
வேங்கைமக வாய்மகன்கண் வேரத்தொடும் பிறந்தாள்.
(இ-ள்.) ஆங்கவன் - அங்கே அந்தப் பத்திரமித்திரன்,
தன்சொல் - தனது வசனத்தை, மறுத்த - தடைசெய்த, அழற்சியினும் -
கோபத்தினாலும்,பொருள் - திரவியங்கள், நீங்க - நீங்குதலாலே, எழு
- உண்டாகிய, ஆர்த்தத்தினும் - ஆர்த்ததத்தியானத்தாலும், பூம் -
பொலிவுபெற்ற,குழலி -அளகத்தையுடையதாயாகிய சுமித்திரையானவள்,
அவ்வுடம்பு - அச்சரீரத்தை, நீத்து - விட்டு, ஓங்கிய - உன்னதமாகிய,
அதிங்கவனம் -அதிங்கவனத்தில், புக்கு - அடைந்து,வேங்கைமகவாய்
- புலிக்குட்டியாகி, மகன்கண் - புத்திரன் பேரில், வேரத்தொடும் -
வைரபாவத்தோடு, பிறந்தாள் - உற்பவித்தாள், எ - று.
வேறு
362. அருளினா லுயிர்கட் கீந்த வப்பெரு ணிமித்த மாக
வெருவினான் மயங்கி வாழும் விலங்கிலிவ் வேழைத் தோற்ற
மிருளிலாத் தேவர் கோயிற் கிட்டதோர் விளக்கின் மேலே
மருளினால் விட்டிற் பாய்ந்து மரித்ததே போல்வ தொன்றே.
(இ-ள்.) அருளினால் - சீவதயவினால், உயிர்கட்கு - அன்னிய
ஜீவர்களுக்கு, ஈந்த - கொடுக்கப்பட்ட, அப்பொருள் - அந்தத்
திரவியமே, நிமித்தமாக - காரணமாக, வெருவினால் - பயத்தோடு,
மயங்கி - பிரமித்து, வாழும் - வாழுகின்ற, விலங்கில் - விலங்கு
கதியில், (தோன்றிய) இவ்வேழை - இந்த அஞ்ஞானியாகிய
சுமித்திரையின், தோற்றம் - இந்தத்தோற்றமானது, இருளிலா -
அந்தகாரமில்லாத, தேவர் கோயிற்கு - ஸ்வாமி கோயிலுக்கு, இட்டது
- இடப்பட்டதாகிய, ஓர் - ஒரு, விளக்கின்மேல் - தீபத்தின்பேரில்,
மருளினால் - மயக்கத்தினால், விட்டில் - விட்டில் பூச்சியானது,
பாய்ந்து - விழுந்து,மரித்தது - இறந்ததை,போல்வது - ஒப்பானதாகிய,
ஒன்று - ஒரு காரியமாம், எ - று. (6)
363. அப்பச்சக் காண மாய கோபலோ பத்தி னாலே
செப்பட்ட பிறவி யாளவ் வனத்திடைத் திரியு நாளுட்
கைப்பட்ட பொருளை யெல்லாங் கருணையா லீவு மந்த
மெய்ப்பட்ட புகழி னானவ் வனத்திடை விரகிற் புக்கான். (இ-ள்.) அப்பச்சக் காணமாய - அப்பிரத்தியாக்கியான மென்னும்,
கோபலோபத்தினாலே - குரோதமான மாயாலோபத்தினாலே, செப்பு -
முன் சொல்லப்பட்ட, அட்ட - கொடுமையான, பிறவியாள் - பிறப்பை
யுடையயவளாகிய சுமித்திரை, (அவ்வாறு புலியாய்), அவ்வனத்திடை -
அந்தக்காட்டில், திரியுநாளுள் -
|