366. வேபியா பசியின் வாடி விழுமுயிர்க் கீயக் கண்டு
கோபியா வஞ்ச நெஞ்சிற் கருணையொன்றின்றிச் செத்துந்
தீபியாப் பிறந்து நின்று மகனையுந் தின்ற விந்தப்
பாபியைப் போல கில்லார்க் கருணையைப் பயில்கை நன்றே.
(இ-ள்.) வேபியா - வருத்துகின்ற (சுடுகின்ற), பசியின் -
பசியினால், வாடி - வாட்டமுற்று, விழும் - சோர்கின்ற, உயிர்க்கு -
(வறுமையுற்ற) ஜீவர்களுக்கு, ஈய - (வேண்டியவற்றைக்) கொடுக்க,
கண்டு - அதைப் பார்த்து, கோபியா - மிகுதியான குரோதமுற்று,
வஞ்சம் - கபடத்துவமுடைய,நெஞ்சில் - மனதில், கருணை ஒன்றின்றி
- ஜீவதயை சிறிதுமில்லாமல், செத்தும் - இறந்தும், தீபியா -
புலியாகி, பிறந்து - ஜனித்து, நின்று - காட்டில் நிலைபெற்றிருந்து,
மகனையும் - முன் தனது குமாரனாகியவனையும், தின்ற -
கொன்றுதின்ற, இந்தப்
பாபியைப் போலகில்லார் - இந்தப்
பாபிஷ்டியைப்போலாகாதவர்களாய்,
(எல்லோரும்) கருணையை -
தயவை,பயில்கை - சேர்ந்திருத்தல்,நன்று
- நல்லதாகும், எ-று. (10)
367. பிறவிக ளனந்தந் தம்மிற் பெற்றதாய்ச் சுற்ற மல்லால்
உறவிக ளொன்று மில்லை யூனினை யுண்டு வாழ்வார்
மறமலி மனத்த ராய்த்தம் மக்களைத் தின்கின் றாரென்
றிறைவனை யிவ ளுரைத்தாளின்றுதன் மகனைத்தின்றாள்.
(இ-ள்.) பிறவிகள் - பிறப்புக்களானவை, (அநாதியாக உண்டாகி),
அனந்தம் - முடிவில்லாதனவா யிருக்கின்றன (அதாவது :
இதுவரையில் இத்தனை ஜன்மமெடுத்தோமென்னும் கணக்கில்லாமல்
இராநின்றன), தம்மில் - அவைகளில், (ஆராய்ந்து பார்க்குமிடத்து),
பெற்ற - ஈன்ற, தாய் - அன்னையாகிய, சுற்றமல்லால் -
பந்துவல்லாமல், உறவிகளொன்றும் - யாதொரு ஜீவனும், இல்லை -
இவ்வுலகில் இல்லாதனவாகும், (அப்படியிருப்பதனாலே), ஊனினை -
மாமிசத்தை, உண்டு - புசித்து, வாழ்வார் - வாழ்கின்றவர்கள், மறமலி
- பாபத்தினால் நிறைந்த, மனத்தராய் - மனத்தையுடையவர்களாய்,
தம் - தங்களுடைய, மக்களை - பிள்ளைகளை, தின்கின்றாரென்று -
தின்னுகிறார்களென்று, இறைவனை - சர்வக்ஞனால் சொல்லப்பட்ட
சாஸ்திரத்தை, இவள் - இந்த ஸு மித்திரையானவள், உரைத்தாள் -
முன்னே சொன்னாள், (அப்படிச் சொல்லியும்), இன்று - இப்பொழுது,
தன் - தன்னுடைய, மகனை - குமாரனை, தின்றாள் - தானே
புலியாகிப் பிறந்து தின்றுவிட்டாள், (சாஸ்திரம் தெரிந்தும் இப்படி
ஆய்விட்டாள் என்றபடி), எ-று.
இறைவன் - என்பது ஆகுபெயராய் இறைவனால் செய்யப்பட்ட
சாஸ்திரத்தை உணர்த்திற்று. இறைவளை என்றும் பாடபேதமுண்டு;
அங்ஙனங்கொள்ளின் அதற்குத் தக்கபடி பொருளுரைத்துக் கொள்க.
(11)
|