(இ-ள்.) (அவ்வாறு) சில - சிலவாகிய, மயில் - மயில்கள், சூழ
- சூழும்படி, செல்லும் - செல்லுகின்ற, சிங்கபோதகத்தைப்போல -
ஒரு ஆண் சிம்மக்குட்டியைப்போல, கலைபயில் - மேகலாபரணம்
தங்கியிருக்கின்ற, அல்குலாரும் - அல்குலையுடைய ஸ்திரீமார்களும்,
குமரனும் - அரசகுமாரனாகிய சிம்மச்சந்திரனும், கழுமுநாளுள் -
பொருந்தியிருக்கின்ற காலத்தில், கொலைபயில் - கொலைத்தொழிலிற்
பழகியிருக்கின்ற, களி - கர்வம் பொருந்திய, நல்யானை -
அழகியயானைகளையுடைய, கொற்றவன் - சிம்மஸேன
மகாராஜனுடைய,
தேவிதன்பால் - மனைவியாகிய
இராமதத்தையினிடத்தே,மலைமிசை மதியம்போல - பர்வதத்தின் மேல்
உதித்த சந்திரனைப்போல, மைந்தன் மற்றொருவன் - மற்றொரு
புத்திரன், வந்தான் - வந்து தோன்றினான், எ-று. (16)
373. இரவல ரென்று முன்னீ ரிடர்கெட வெழுந்த வந்தப்
புரவல குமர னாமம் பூரசந் திரனென் றார்கள்
கரைபொரு கடலந் தானைக் காவல குமரர் வானத்
திரவியு மதியும் போல விருநிலத் தியலு நாளால்.
(இ-ள்.) (அங்ஙனம்) இரவலரென்னும் - யாசகரென்று
சொல்லப்பட்ட, முன்னீர் - சமுத்திரத்தினுடைய, இடர் -
அலையென்னும் ஓயாதவறுமையானது, கெட - நீங்கும்படி, எழுந்த -
உண்டாகிய,அந்தப்புரவலகுமரன் - அந்த இராஜகுமாரனுடைய, நாமம்
- பெயரை, பூரசந்திரன் என்றார்கள் - பூரண சந்திரன் என்று
(தாய்தந்தையர்) இட்டார்கள், கரை - கரையில், பொரு - மோதுகின்ற,
கடல் - சமுத்திரம்போல் பெரிதாகிய, அம் - அழகிய, தானை -
சேனையையுடைய, காவலகுமரர் - அந்த அரச குமாரர்களிருவரும்,
வானத்து - ஆகாயத்தில் செல்கின்ற, இரவியும் - சூரியனும், மதியும் -
சந்திரனும், போல - நிகர்ப்ப, இரு நிலத்து - பெரிதாகிய விப்பூமியில்,
இயலுநாள் - (வளர்ச்சியுற்றுச்) செல்கின்ற காலத்தில், எ-று.
ஆல் - அசை. (17)
வேறு.
374. வாரி சூழ்வல யந்துய ரெய்திடிற்
றாரி யானது தானுட னெய்திடும்
ஏர ணிந்துல கின்புறி னின்புறும்
மாரி போற்கொடை வண்கையம் மன்னனே.
(இ-ள்.) வாரிசூழ் - சமுத்திரஞ்சூழ்ந்த, வலயம் - வட்டமாகிய
பூமியானது, துயரெய்திடில் - துக்கமடைந்தால், தாரியான் - மாலையை
யணிந்தவ
|