னாகிய, மாரிபோல் - மழையைப்போல, கொடை - தியாகஞ்
செய்யும்படியான, வண் - வளப்பம் பொருந்திய, கை -
கையையுடைய, அம்மன்னன் - அந்த சிம்மஸேன மகாராஜன், அது -
அவ்வுலகமடைந்த அத்துக்கத்தை, தான் - தானும், உடன் - ஒரு
தன்மையாக, எய்திடும் - அடைவான், ஏர் அணிந்து - நன்மை
நிறைந்து, உலகு - இவ்வுலகத்தார், இன்புறின் - இன்பமுற்றால்,
இன்புறும் - தானும் சந்தோஷமடைவான், எ-று.
`தாரி? என்பதில், இ - சாரியை. (18)
375. பொன்னு நன்மணி யும்புனை பூண்களும்
மன்னும் பொன்னறை மற்றொரு நாள்புக
பன்ன கம்முன்ன மாயவன் பார்த்திடா
மின்னின் வேரத்தின் வீழ்ந்தெயி றூன்றினான்.
(இ-ள்.) பொன்னும் - ஸ்வர்ணமும், நல் - நன்மையாகிய,
மணியும் - அரதனங்களும், புனை - அலங்கிருதமாயணிந்து
கொள்ளும்படியான, பூண்களும் - ஆபரணங்களும், மன்னும் -
சேர்ந்திராநின்ற, பொன்னறை - பாண்டாகாரத்தில், மற்று - பின்னை,
ஒரு நாள் - ஒரு தினம், புக -(மேற்கூறிய அரசன்) அடைய, முன்னம்
- முன்னே, பன்னகம் ஆயவன் - சர்ப்பமாகப் பிறந்திருந்த
ஸ்ரீபூதியானவன், பார்த்திடா - (அரசனைக்) கண்டு, வேரத்தின் -
வைரபாவத்தினால், மின்னின் - மின்னல் சடுதியில் தோன்றுவதுபோல,
வீழ்ந்து - மேல் விழுந்து, எயிறூன்றினான் - பல்லைப்பதித்துக்
கடித்தான், எ-று. (19)
376. பைய ரவின் விடத்தொடு பார்மிசை
மைய லுற்று விழுந்தனன் மன்னவன்
வெய்ய வ்னர வத்தொடு மேதினி
வைய நைய விழுந்தது போலவே.
(இ-ள்.) (அவ்வாறு அந்நாகம் கடித்த மாத்திரத்தில்)
வெய்யவன் - சூரியனானவன், அரவத்தொடு - (தன்னைத் தீண்டிய)
இராகுவாகிய சர்ப்பத்தோடு, மேதினி - இந்தப்பூமியில், வையம் -
இவ்வுலகத்தார், நைய - (இருளினால்) வருந்தும்படி, விழுந்ததுபோல
- வீழ்ந்ததை நிகர்க்க, பை - பணாமுடியையுடைய, அரவின் -
சர்ப்பத்தினுடைய, விடத்தொடு - விஷத்துடனே, பார்மிசை -
இப்பூமியின் மேல், மன்னவன் - அரசனானவன், மையலுற்று
மயக்கத்தைப் பொருந்தி, விழுந்தனன் - விழுந்தான், எ-று. (20)
377. கல்லென் னோசை கடலுடைந் திட்டென
வெல்லை யின்றி யெழுந்த தியாவருஞ்
|