உயிர் - உயிரானது, ஏகியது - சரீரத்தைவிட்டு நிங்கிற்று, ஏகலும் - அவ்வாறு நீங்கிவிடவும் (பின்னை என்ன நடந்ததெனில்), எ-று. (23)
380. மைய லுற்றவன் மந்திர மொன்றினால்
நெய்யொ ழுக்கி நெருப்பை யெரித்திடாப்
பையெ னப்பண நாகமெ லாமழைத்
துய்ய வுநுமக் கொன்றுரை செய்கின்றேன்.
(இ-ள்.) அவன் - அம்மந்திரவாதியானவன், மையலுற்று -
மயக்கத்தையடைந்து, மந்திரமொன்றினால் - மற்றொரு
மந்திரத்தினால், நெய்யொழுக்கி - நெய்யை வார்த்து, நெருப்பை -
அக்கினியை, எரித்திடா - எரித்து, (அதாவது : ஒளபாஸனம் அல்லது
ஓமம் பண்ணி), பையென - மெதுவாக, பணம் - பணா
முடியையுடைய,
நாகமெலாம் - ஸ்ர்ப்பங்களை யெல்லாம், அழைத்து
- அம்மந்திரபலத்தால் அழைப்பித்து, (அவைகளைப் பார்த்து
ஸர்ப்பங்காள்!) நுமக்கு - உங்களுக்கு, உய்ய - பிழைக்கும்படியாக,
ஒன்று - ஒருகாரியம், உரை செய்கின்றேன் - சொல்கின்றேன்,
(அதாவது), எ-று.
உம் - அசை. (24)
381. குற்ற மில்லவர் மற்றிந் நெருப்பினை
யுற்ற போழ்திது நீரினை யொத்திடும்
குற்ற மில்லவர் போநடு வன்றெனி
லிற்ற தும்முயி ரென்கையி லென்றனன்.
(இ-ள்.)குற்றமில்லவர் - (அரசனைக்கடித்த) குற்றமில்லாதவர்கள்,
இந்நெருப்பினை - இந்த ஓமர்க்கினியை, உற்றபோழ்து -
பொருந்தினபோது, இது - இவ்வோமாக்கினியானது,
நீரினையொத்திடும்
- (அவர்க்கு) ஜலத்தை நிகர்க்கும், குற்றமில்லவர்-
குற்றமில்லாதவர்கள், நடு - இவ்வக்கினியின் மத்தியில், போம் -
போவீராக, அன்றெனில் - அப்படியில்லாவிட்டால், உம்முயிர் -
உங்கள் உயிரானது, என் கையில் - எனது கரத்தில், இற்றது -
அகப்பட்டு இறந்து படுவதாகும், என்றனன் - என்று சொன்னான்,
எ-று.
மற்று - அசை. (25)
382. அஞ்சி மற்றவ னாணை யிறந்திடா
நஞ்சு தாரிக ணண்ணின தீயினைப்
புஞ்சு பூம்பொய்கை புக்கன போலவே
யுஞ்சு போயின வொன்றொழி யாமையே.
|