பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 175


Meru Mandirapuranam
 

உயிர் - உயிரானது, ஏகியது - சரீரத்தைவிட்டு நிங்கிற்று, ஏகலும் -
அவ்வாறு நீங்கிவிடவும் (பின்னை என்ன நடந்ததெனில்), எ-று. (23)

 380. மைய லுற்றவன் மந்திர மொன்றினால்
     நெய்யொ ழுக்கி நெருப்பை யெரித்திடாப்
     பையெ னப்பண நாகமெ லாமழைத்
     துய்ய வுநுமக் கொன்றுரை செய்கின்றேன்.

   (இ-ள்.)   அவன் -  அம்மந்திரவாதியானவன்,    மையலுற்று -
மயக்கத்தையடைந்து,       மந்திரமொன்றினால்      -   மற்றொரு
மந்திரத்தினால்,   நெய்யொழுக்கி  - நெய்யை வார்த்து, நெருப்பை -
அக்கினியை, எரித்திடா - எரித்து, (அதாவது : ஒளபாஸனம் அல்லது
ஓமம் பண்ணி),   பையென  -  மெதுவாக,   பணம்  -      பணா
முடியையுடைய, நாகமெலாம் - ஸ்ர்ப்பங்களை யெல்லாம்,  அழைத்து
- அம்மந்திரபலத்தால்   அழைப்பித்து,    (அவைகளைப்   பார்த்து
ஸர்ப்பங்காள்!)  நுமக்கு   - உங்களுக்கு, உய்ய - பிழைக்கும்படியாக,
ஒன்று  -  ஒருகாரியம்,  உரை  செய்கின்றேன்  -  சொல்கின்றேன்,
(அதாவது), எ-று.

                      உம் - அசை. (24)

 381. குற்ற மில்லவர் மற்றிந் நெருப்பினை
     யுற்ற போழ்திது நீரினை யொத்திடும்
     குற்ற மில்லவர் போநடு வன்றெனி
     லிற்ற தும்முயி ரென்கையி லென்றனன்.

    (இ-ள்.)குற்றமில்லவர் - (அரசனைக்கடித்த) குற்றமில்லாதவர்கள்,
இந்நெருப்பினை   -   இந்த   ஓமர்க்கினியை,   உற்றபோழ்து   -
பொருந்தினபோது,      இது      -      இவ்வோமாக்கினியானது,
நீரினையொத்திடும் - (அவர்க்கு) ஜலத்தை நிகர்க்கும், குற்றமில்லவர்-
குற்றமில்லாதவர்கள்,  நடு  -  இவ்வக்கினியின்  மத்தியில்,  போம் -
போவீராக,  அன்றெனில்  -  அப்படியில்லாவிட்டால்,  உம்முயிர்  -
உங்கள்  உயிரானது,  என்  கையில்  -  எனது  கரத்தில், இற்றது -
அகப்பட்டு   இறந்து படுவதாகும்,  என்றனன் -  என்று சொன்னான்,
எ-று.

                   மற்று - அசை. (25)

 382. அஞ்சி மற்றவ னாணை யிறந்திடா
      நஞ்சு தாரிக ணண்ணின தீயினைப்
      புஞ்சு பூம்பொய்கை புக்கன போலவே
      யுஞ்சு போயின வொன்றொழி யாமையே.