176மேருமந்தர புராணம்  


 

   (இ-ள்.) மற்று - பின்பு,அவன் - அம்மாந்திரீகனுடைய, ஆணை -
ஆக்கினைக்கு,   அஞ்சி   -   பயந்து,   இறந்திடா   -  அதனைக்
கடவாதனவாகிய,   நஞ்சுதாரிகள்  - ஸர்ப்பங்களெல்லாம், தீயினை -
ஹோமாக்கினியை,   நண்ணின   -  அடைந்தவைகளாகி;  புஞ்சு  -
நீர்சேர்ந்திராநின்ற, பூம் - அழகிய புஷ்பங்களையுடைய, பொய்கை -
தடாகத்தில்,   புக்கனபோல   -   புகுந்து   வெளியேறியவைபோல,
ஒன்றொழியாமை  -  ஒன்றும் கெடுதியடையாமல்,  உஞ்சுபோயின -
உயிர்பிழைத்துப் போயின, எ-று. (26)

 383. வந்த கந்தனன் மற்றந் நெருப்பினை
     நின்று புக்கிட நீறது வாயது
     சென்று காள வனத்திலத் தீமையா
     லன்று லோபச் சமரம தாயினான்.

   (இ-ள்.)   1அகந்தனன் -   அகந்தன  ஸர்ப்பமானது,  வந்து -
சமீபத்தில்  வந்து,  அந்நெருப்பினை  -  அவ்வக்கினியில், புக்கிட -
புகுந்த மாத்திரத்தில், நின்று -அந்நெருப்பிலேயே நின்று, நீறதுவாயது
-  பஸ்மமாகியது,  (அவ்வாறாயபின்  அவ்வகந்தனனாயிருந்த ஸ்ரீபூதி
யென்னும்  மந்திரி),  சென்று -  போய், அத்தீமையால் - அந்த பாப
கர்மத்தினாலே, காளவனத்தில் - காளமென்னும் வனத்திலே,அன்று -
அக்காலத்தில்,    லோபம்  -   லோபகுணத்தை  மிகுதியாகவுடைய,
சமரமதாயினான் - சமரீ மிருகமாய்ப் பிறந்தான், எ-று.

                        மற்று - அசை. (27)

 384. ஆயு வுங்கிளை யும்மர சும்மெலாம்
     மாய மென்பவன் போல மரித்திடாச்
     சீய சேனனுந் தீவினை வன்மையா
     லாயி னன்சல்ல கீவனத் தானையே.

    (இ-ள்.)  (இ-ள்.) சீயசேனன் -  சிம்மசேன  மஹாராஜனானவன்,
ஆயுவும் -  ஆயுஷ்யமும்,  கிளையும் - பந்துத்துவமும்,   அரசும் -
இராஜ்யமும்,     (ஆகிய)     எலாம்    -      இவைகளெல்லாம்,
மாயமென்பவன்போல     -    மாயமாக   நீங்கப்பட்டவை யென்று
யாவர்களுக்கும்   தெரிவிப்பவன் போல, மரித்திடா - (மேற்கூறியபடி)
இறந்து,    தீவினை   -   பாப    வினையினது,    வன்மையால் -
வலிமையினாலே,   சல்லகீவனத்து   -   சல்லகீ என்கிற வனத்திலே,
ஆனையாயினன் - யானையாகப் பிறந்தான், எ-று. (28)

 385. அசனி கோட மெனும்பெய ராயவன்
      கசனி செய்து கடாத்தயல் யானையை

_______________________________________________
1அகந்தனன் - அகந்தனன் என்னும் பாம்பாகிய ஸ்ரீபூதி யென்னும்
மந்திரி.