பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 177


Meru Mandirapuranam
 

    விசனி யாப்பிடி சூழ விலங்கன்மே
    லசன மிங்குவ தாக லமர்ந்தனன்.

   (இ-ள்.)   அவன் - அவ்வாறு யானையாகப்  பிறந்த   மன்னன்,
அசனி கோடமெனும் - அசனி கோஷமென்கிற, பெயராய் -  பெயரை
யடைந்து,  கடாத்து  -  தன்மத  பலத்தினால்,  அயல் யானையை -
பக்கத்தில்  சஞ்சரித்த  மற்ற  ஆண்  யானைகளை,  கசனி செய்து -
வருத்தஞ்  செய்து,  விசனியா -  வருத்தமடையாத,  பிடி - பெட்டை
யானைகள், சூழ - தன்னைச் சூழ, விலங்கன்மேல் - அக்காட்டிலுள்ள
பர்வதத்தின்  மேல்,  அசனம் - தனக்கு  இரையானது, இங்குவதாக -
பெருங்காயத் தழையாக, அமர்ந்தனன் - பொருந்தினான், எ-று. (29)

 386. நாவி நாறுங் குழல்கள் விரித்திடா
    ஆவி போன கலாவி கிடந்தெனத்
    தேவி யைத்தெருண் டாரெடுத் துத்துய
    ரோவும் வண்ண முரைத்துட னோம்பினார்.

    (இ-ள்.)(இஃதிப்படியிருக்க,முன்னுரைத்தபடி மன்னன் இறந்ததற்கு)
நாவி -  கஸ்தூரி  வாசனையானது,  நாறும்  -  வீசுகின்ற, குழலிள் -
அளகங்களை,  விரித்திடா  -  விரித்துக்கொண்டு,  ஆவி  போன -
உயிர்நீங்கின,   கலாவி   -   ஆண்   மயிலானது,   கிடந்தென  -
கிடந்ததுபோல,  (பிரக்ஞையற்றுக்  கிடந்த)  தேவியை - இராமதத்தா
தேவியை, எடுத்து - தூக்கி, தெருண்டார் - ஞானத்தெளிவுள்ள சிலர்,
துயர் -  அரசனிறந்ததனா  லுண்டாகிய  துக்கம்,  ஓவும் வண்ணம் -
அவளை  விட்டு  நீங்கும்படியான விதங்களை, உரைத்து - சொல்லி,
உடன் - உடனே, ஓம்பினார் - (அவளை) உபசரித்தார்கள், எ-று. (30)

 387. தோன்றி னந்நிலை யாதுட னேகெட
     லீன்ற தாயரு மீட்டுவைத் தேகலு
     மான்ற வரழி வெய்தலும் வையகந்
     தோன்றி னன்று தொடங்கின வல்லவோ.

   (இ-ள்.) (அவ்வாறு  உபசரித்து)  தோன்றின  -  (இவ்வுலகத்தில்)
பிறந்த  பரியாயங்களெல்லாம், நிலையாது - நிலையில்லாமல், உடனே
- அவ்வாறு தோன்றுதலோடு கூடவே, கெடல் - கெடுதலும், ஈன்ற -
நம்மைப்பெற்ற,  தாயரும் -  தாய்மார்களும், ஈட்டு வைத்து - பெற்று
வைத்துவிட்டு,  ஏகலும் -  அழிவெய்திச்  செல்லுதலும், ஆன்றவர் - பெரியோர்களாயினாரும்,  அழிவெய்தலும் -  நாசத்தை  அடைதலும்,
வையகம் -  இந்த வுலகமானது, தோன்றினன்று - தோன்றின அன்று
முதல், (அதாவது : அநாதியாகவே) தொடங்கினவல்லவோ - சேர்ந்து
வரப்பட்டவைகளல்லவோ", எ-று.