பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 179


Meru Mandirapuranam
 

   பேறிலே லும்மைச் சூட்டி யரசனைப் பிரிந்தேனென்ன
   வாறிழி வரையைப் போல வழுதடி தொழுது வீழ்ந்தார்.

   (இ-ள்.)   தேறினாள்  -   (அவ்வாறு)   தெளிவடைந்தவளாகிய
இராமதத்தை, (அதன்மேல்) மைந்தர் தம்மை -தன் குமாரரிருவரையும்,
தருகென - அழைத்து  வருக  என்று, செப்ப - (அருகில் நின்றவரை
நோக்கிச்)  சொல்ல,  (அவர்கள்  போய்ச்  சொன்ன   மாத்திரத்தில்
பிள்ளைகளும்  வந்தார்கள்)   நொந்த  - வருத்தமுற்ற, ஏறுபோல் -
விருஷபத்தைப்போல, நடந்து வந்து - மேற்கூறியபடி நடையாக வந்து,
ஆங்கு  -  தாய்  இருந்த  அவ்விடத்தில்,  இறைஞ்சி  நின்றவரை -
வணங்கி  நின்ற  அந்தக்  குமாரர்களை,  நோக்கி  - (இராமதத்தை)
பார்த்து,  பேறிலேன் - தவபாக்கியமில்லாத யான், உம்மைச் சூட்டி -
உங்களை   ஈன்று   பூமிக்கு   அணியாகச்   சேர்த்து     (இராஜ்ய
பட்டாபிஷேகம்  செய்வதற்கு  முன்னே),  அரசனை  -  இராஜாவை,
பிரிந்தேன்  என்ன  -  விட்டு  நீங்கினேன்  என்று சொல்லி வருந்த,
(அவர்களும்  வருத்தமுற்று)     ஆறிழி  -  அருவி  பாயா  நின்ற,
வரையைப்போல  -  பர்வதத்தைப்போல,  அழுது  -   மார்பின்மீது
கண்ணீரை  வடித்து,  அடி  தொழுது  - தாயின் பாதத்தை வணங்கி,
வீழ்ந்தார் - பூமியில் விழுந்தார்கள், எ-று. (34)

 391. திருவனா ளவரைத் தேற்றிச் சீயசந் திரனை நோக்கி
     முருகுலா மகுடஞ் சூட்டி மண்முழு தாள்க வென்று
     பொருவிலா ளதனிற் பின்னைப் பூரசந் திரனை நோக்கி
     யரசிளங் குமர னாய்நீ யமர்ந்தினி திருக்க வென்றாள்.

    (இ-ள்.)   (  அப்படி   வணங்கியபின்பு )   பொருவிலாள்   -
ஒப்பில்லாதவளாகிய,  திருவனாள் - இலக்குமிபோன்ற  இராமதத்தை,
அவரை  -  அந்தக்  குமாரர்களை,  தேற்றி  -  தெளியச்   செய்து,
(அவர்களுள்)  சீயசந்திரனை  -  சிம்மச்சந்திர குமாரனை, நோக்கி -
பார்த்து,  முருகுலாம்  -  வாசனை  வீசுகின்ற,  (புஷ்பமாலைகளோடு
கூடிய)  மகுடஞ் சூட்டி - கிரீடத்தையணிந்து,மண்முழுது - இந்தப்பூமி
இராஜ்யம்  முழுவதையும்,  ஆள்க  வென்று  - நீ அரசாளக்கடவாய்
என்று சொல்லி, அதனிற்பின்னை - அதன்பிறகு,பூரசந்திரனை நோக்கி
- பூரணச்சந்திர குமாரனைப் பார்த்து, நீ - நீ, அரசிளங் குமரனாய் -
யௌராஜ்யத்தையுடைய இளவரசனாக, அமர்ந்து - பொருந்தி, இனிது
- சந்தோஷமாக,   இருக்க   என்றாள்  -   இருக்கக்கடவாயென்று
கூறினாள், எ-று. (35)

 392. இந்திர விபவந் தன்னை யிருவகிர் செய்து மைந்த
     ரந்தரம் பிறிதொன் றின்றி யின்பத்து ளழுந்து நாளுட்
     சிந்துரக் களிற்றுச் சீய சேனன்றன் வார்த்தை கேட்டு
     வந்தனர் சாந்தி ரண்ணிய மதியென்பார் துறந்த மாதர்.