(இ-ள்.) (அவ்வாறே அமைந்து) இந்திர விபவந்தன்னை -
தேவேந்திர விபவத்தை, இருவகிர் செய்து - இரண்டு கூறுசெய்து,
மைந்தர் - இக்குமாரர்கள், அந்தரம் பிறிதொன்றின்றி - வேறொரு
வித்தியாசமுமின்றி, இன்பத்துள் - சௌக்கியத்துள்,அழுந்து நாளுள் -
ஆழ்ந்து அதனை அனுபவித்துக்கொண்டிருக்குங் காலத்தில்,
சிந்துரக்களிறு - சிந்துரம்போன்ற புள்ளிகளையுடைய மஸ்தகம்
பொருந்திய பட்டத்து யானைக்கு (அதாவது : புகர்முகக்களிறாகிய
யானைக்குத்) தலைவனாகிய, சீயசேனன் தன் வார்த்தை கேட்டு -
சிம்மஸேன மகாராஜனிறந்த சமாசாரம் பொருந்திய
வார்த்தைகளைக்கேட்டு, துறந்த மாதர் - தபத்தைக் கைக்கொண்டிரா
நின்ற ஆரியாங்கனைகளாகிற, சாந்திரணியமதி யென்பார் - சாந்திமதி
இரணியமதி யென்னும் இருவரும், வந்தனர் - இராமதத்தையிடம்
வந்தார்கள், எ-று. (36)
393. அங்கநூல் பயின்று வல்லா ரறவமிர் தளிக்குஞ சொல்லார்
சிங்கநற் பாய்ச்ச லாதி நோன்பொடு செறிந்து நின்றார்
தங்கிய கருணை நெஞ்சிற் றரியினா ருயிர்கட் கெல்லாந்
திங்கள்வெண் குடையி னான்றன் றேவியைக் கண்டு சொன்னார்.
(இ-ள்.) (அவ்வாறு வந்து) அங்கநூல் - அங்காகமம் முதலாகிய
சாஸ்திரங்களை, பயின்று - கற்று, வல்லார் - அவற்றில்
வல்லமையுடையவர்களும், அறவமிர்து - தர்மாமிருதத்தை, அளிக்கும்
- கொடுக்கும் (அதாவது : உபதேசிக்கும்படியான), சொல்லார் -
வசனத்தையுடையவர்களும், சிங்கநற் பாய்ச்சலாதி - 1ஸிம்ம
நிஷ்கிரீடித முதலாகிய,நோன்பொடு - மஹாநோன்புகளோடு, செறிந்து
- சேர்ந்து, நின்றார் - நிலைபெற்றவர்களும், உயிர்கட்கெல்லாம் -
ஸ்தாவர சங்கமாதி ஸகல ஜீவன்களின்பேரிலும், தங்கிய -
சேர்ந்திராநின்ற, கருணை - தயவை, நெஞ்சில் - மனதில், தரியினார்
- தரித்தவர்களுமாகிய அவ்விருவரும், திங்கள் - சந்திரன்போன்ற,
வெண்குடையினான்தன் - வெள்ளைக்குடையையுடைய அரசனது,
தேவியை - மனைவியாகிய இராமதத்தையை, கண்டு - பார்த்து,
சொன்னார் - கீழ்வருமாறு சொன்னார்கள், எ-று. (37)
394. அங்கர வல்கு லாரி வருந்ததி யனைய நங்கை
மங்கல மிழந்த தெம்ம னோர்கடம் பாவம் வாடிச்
செங்கய லனைய கண்கள் சிதறநீ யழுத போழ்தும்
வெங்களி யானை வேந்தன் வெளிப்படா னொழிக வென்றார்.
(இ-ள்.) அங்கு - அவ்விடத்தில், ( மேற்கூறியபடி
சொல்லத்தொடங்கிய அவர்கள், இராமதத்தையை நோக்கி), அரவு -
ஸர்ப்பத்தினது படத்தைப்போன்ற, அல்குலாரில் - அல்குலையுடைய
ஸ்திரீமார்களுக்குள்ளே, அருந்ததி யனைய - அருந் ____________________________________________
1இதன் விவரத்தை நோன்புக் கதையில் பார்த்துக்கொள்க.
|