வைசயந்தன் முத்திச்சருக்கம் 19


 

பார்   -   நெல்லரிசியால்   சமைத்த  அன்னங்களை   உண்பாரும்,
தமர்களுக்கு  -   சுற்றத்தார்களுக்கு,   ஊட்டுவாரும்   -  அவற்றை
ஊட்டுகின்றவர்களும்,   வேலை   -   சமுத்திரஞ்  சூழ்ந்த,   நல் -
நன்மையாகிய,  உலகம் - இந்தப்  பூமியில்,  விற்கும் - விற்கப்படுகிற,
விழுப்பொருள்     -    பெரிய   பொருள்கள்,   வாங்குவாரும்  -
வாங்குகின்றவர்களும்,  ஆலயம்தோறும் - ஸ்ரீகோயில்கடோறும், ஐமை
-  பூசனைச்   சிறப்பை,   அமர்ந்து  -  பொருந்தி,   செய்வாரும் -
செய்கின்றவர்களும்,  ஆனார்  -  ஆகியவர்களாய்  விளங்குவார்கள்,
எ-று.                                                  (39)

 40. முழவமா முரசஞ் சங்கங் கடலென முழங்க வம்பொற்
    குழலியாழ் வீணை ஏங்கக் கொம்பனார் குலாவி யாட
    நிழலுலா மதியம் போலுங் குடைமும்மை நீழல் வேந்தன்
    விழைவறா மூதூர் வீத சோகமாய் விளங்கு நின்றே.

     (இ-ள்)  முழவம்  -  மத்தளங்களும்,  மா - பெரிய,  முரசம் -
பேரிகைகளும், சங்கம் - ஊதுசங்குகளும், கடலென - சமுத்திரம்போல,
முழங்க - சப்திக்கவும்,   அம் - அழகிய,  பொன் - பொன்னாலாகிய,
குழல் - புள்ளாங்குழல்களும்,  யாழ் - யாழாகிய, வீணை - நால்வகை
வீணைகளும், ஏங்க - சப்திக்கவும், கொம்பனார் - பூங்கொடி போன்ற
நர்த்தனமாதர்கள், குலாவி - பிரகாசித்து,  ஆட - நர்த்தனம்  பண்ண,
நிழல்  உலாம் - குளிர்ந்த  கிரணங்கள் பரவுகின்ற, மதியம்போலும் -
சந்திரன்போன்ற,  குடைமும்மை   -   சத்திரத்திரயத்தினது,  நிழல் -
நிழலிலுள்ள,  வேந்தன் - அருகபரமனது,  விழைவு - திருவிழாக்கள்,
அறா  -   பற்றறாத,  மூதூர்   -   பெரிதாகிய  அப்பட்டணமானது,
வீதசோகமாய் - சோகமில்லாமல்,  நின்று  விளங்கும் - நிலைபெற்றுப்
பிரகாசித்திருக்கும்,(வீதசோகம் என்னும் நகர் வீதசோகமாய் விளங்கும்
என்றபடி.), எ-று.                                        (40)

வைசயந்தன் சரிதை

____

வேறு.

 41. பொன் னுலகுலாய்ப் போந்து பூமிசை
    மன்னு மன்னவிம் மாந கர்க்கிறை
    யன்ன மென்னடை யார்க் கனங்கனா
    மன்னர் மன்னவன் வைச யந்தனே.

     (இ-ள்)  பொன்னுலகு - தேவலோகமானது,  உலாய்ப்போந்து -
எழுந்தருளிவந்து,  பூமிசை - பூமியின்மேலே, மன்னும் - சேர்ந்ததற்கு,
அன்ன - ஒத்திராநின்ற,  இம்மாநகர்க்கு - இந்த வீதசோகம்  என்னும்
பட்டணத்திற்கு,இறை - அதிபதியானவன், அன்னமென்னடையார்க்கு -
அன்னப்பறவை போலும்