(இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும்) நெருப்பிடை -
நெருப்பினிடத்தில், கிடந்த - தங்கியிருந்து (கொதிப்பேறிய), செம்பில்
- செம்பிலே, பட்ட - அடைந்த, நீர்த்துள்ளிபோலும் - ஜலத்துளியை
நிகர்க்கின்ற, விருப்பிடை - ஆசையாகிய (அக்கினியில்), கிடந்த -
தங்கியிருந்த,உள்ளத்து - மனத்தில்,எழுந்த - உண்டாகிய, வேகத்தின்
- தீவிரத்தினாலாகிய,இன்பம் - சுகமானது, திருத்தியைச் செய்யுமென்று
- திருப்தியை உண்டாக்குமென்று, புலத்தினை - அறிவை, செறிய -
அதுசேர, நிற்றல் - அதன் வழியிலே நிற்பது, (அதாவது : அறிவால்
அதைப்பற்றி நிற்பது), நெருப்பை - அக்கினியை, நெய்தெளித்து -
நெய்யை ஊற்றி, அவிப்பான் - அவிக்கும்பொருட்டு, எழுந்தவன் -
பிரவேசித்தவனுடைய, நினைப்பின் - எண்ணத்தைப்போன்ற, ஒன்று -
ஓர் எண்ணமாகும், எ-று. (58)
415. பூமியந் தரத்து வந்து பொருந்திய புலத்தி னாசை
யோவிலந் துய்த்தும் வேறோர் சுவையின்மை யுணர்ந்து மீட்டும்
மேவுதற் கெழுதல் மென்று விட்டதை மென்ற லன்றிக்
கூவல்மண் டூகம் போலுங் குணத்தமே நினைக்கி னென்றான்.
(இ-ள்.) பூமி - இப்பூவுலகத்திலும், அந்தரத்து -
தேவலோகத்திலும், வந்து - (நாம்) ஜனனமெடுத்து வந்து, பொருந்திய
- சேர்ந்த, புலத்தின் - இந்திரிய விஷயங்களினாலுண்டாகிய, ஆசை -
விருப்பங்களை, ஓவிலம் - நீங்காதவர்களாய்,துய்த்து - இடைவிடாமல்
அனுபவித்தும், (அவற்றில்),வேறோர் - வேறு நூதனமாகிய ஒரு, சுவை
- ரஸமானது,இன்மை - இல்லாததை, உணர்ந்தும் - அறிந்தும், மீட்டும்
- மறுபடியும், மேவுதற்கு - அவற்றைப் பொருந்துதற்கு, எழுதல் -
முயற்சித்தல், மென்று விட்டதை - முதலிலே மென்றுமிழ்ந்துவிட்டதை,
மென்றல் - மறுபடியும் எடுத்து மெல்லுதலாம், அன்றி -
இதுவுமல்லாமல், நினைக்கின் - (இக்குணத்தை நன்றாக) ஆராய்ந்து
பார்க்குமிடத்து, ( இக்குணமுடைய நாம் ), கூவல் -
கிணற்றினுள்ளிருக்கப்பட்ட, மண்டூகம்போலும் - (வெளி விஷய
மொன்றையுமறியாத) தவளையைப்போன்ற, குணத்தமே - (வேறொரு
நிலைத்த சுகத்தை யுணராத) குணத்தினையுடையோமாவோம்,என்றான்
- என்றும் அவ்வரசன் நினைத்தான், எ-று. (59)
416. பெறற்கரும் பிறவி காட்சி பெருந்தவந் திருந்து மாற்றஞ்
சிறப்புடைக் குலநல் யாக்கை செறிவித்த செழுந் தவத்தை
மறப்பனேல் மாற்றை யாக்கு மிவையும்வந் தணுக்கா வென்று
திறத்துளி தெரிந்து திங்கணாமற்குத் தெரியச்சொன்னான்.
(இ-ள்.) (அவ்வாறு நினைத்துப் பின்னர்) பெறற்கரும் -
பெறுதற்கரிதாகிய, பிறவி - இம்மனிதப் பிறப்பையும், காட்சி -
தரிசனத்தையும், பெருந்
|