தவம் - பெரியதவத்தாலுண்டாகும் அரசையும், திருந்துமாற்றம் -
திருத்தமாகிய சொல்லையும், (அதாவது : ஞானசாஸ்திரத்தையும்),
சிறப்புடை - மேன்மையுடைய, குலம் - குலத்தையும், நல்யாக்கை -
நல்ல இலக்ஷணம் நிறைந்த சரீரத்தையும், செறிவித்த - ஒருவனை
அடைவித்த, செழும் - செழுமை பொருந்திய, தவத்தை -
(ஸம்மியத்துவத்துடன் கூடிப் புண்ணியத்திற்கும் ஹேதுவாகிய) தபஸை,
மறப்பனேல் - அவன் மறந்து அஞ்ஞானத்துடன் சேர்ந்து
மோஹனீயோதய பாவத்தில் வர்த்திப்பானேயானால், (அது), மாற்றை
ஆக்கும் - ஸம்ஸாரத்தை உண்டுபண்ணும், (அப்படி உண்டான
ஸம்ஸாரத்திலும்), இவையும் - (இங்குக் கூறிய புண்ணியப்
பலன்களாகிய) மனித சரீர மாதியானவைகளும், வந்து அணுகா -
வந்து சேரமாட்டா, என்று - என்று விளக்கி, திறத்துளி - இந்த
ஸம்ஸார தத்காரண மோக்ஷ தத்காரணங்களின் விதத்தை, தெரிந்து -
அறிந்து, திங்கள் நாமற்கு . (தன் தம்பியாகிய) பூரணசந்திரனுக்கு,
தெரிய - (லௌகீக வைதீக விஷயங்களாகிய நிச்சய வியவகாரப்
பகுதிகள்) தெரியும்படி, சொன்னான் - (அவ்வரசன்) கூறினான்,எ-று.
?திறத்துளி? என்பதில் உளி - ஏழனுருபு; திறத்தினிடத்தை
(அதாவது : திறத்தை) என விரிக்கவேண்டும். (60)
417. முன்னஞ்செய் தவத்தின் வந்து முடிந்தநற் பயத்தைக் கண்டாற்
பின்னுமத் தவத்தைச் செய்து பெரும்பய னுகர்ந்தி டாதே
மின்னஞ்சு நுசுப்பினார்தம் வேட்கையின் வீழ்ந்து போகும்
வன்னெஞ்சற் கில்லை கண்டாய் மாற்றிடைச் சுகமு மென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு கூறிப் பின்னரும்) முன்னஞ் செய் -
பூர்வத்தில் செய்யப்பட்ட, தவத்தின் - தவத்தினால், வந்து முடிந்த -
வந்து கைகூடிய, நற்பயத்தை - நன்மையாகிய புண்ணிய பலன்களை,
கண்டால் - அனுபவமாகப் பார்த்தால், ( அஃதிவ்வாறு சுகத்தைக்
கொடுக்கக்கூடியதா யிருக்கிறதென்று மகிழ்ந்து) பின்னும் - மறுபடியும்,
அத்தவத்தை - அந்தத் தவத்தை, செய்து - இயற்றி, பெரும்பயன் -
பெரிதாகிய அப்பியுதய நைஸ்ரீயஸபலன்களை, நுகர்ந்திடாது -
அனுபவிக்காமல், ( தான் அத்தவப்பயனை அனுபவமாகப்
பார்த்திருந்தும் அதைவிட்டு) மின் அஞ்சும் - மின்னற்கொடியும்
(பார்த்து நாம் உருவத்தில் இதற்கு நிகராகமாட்டோம் என்று நாணி)
அஞ்சுகின்ற, நுசுப்பினார்தம் - இடையையுடைய மாதர்களின்,
வேட்கையின் - காமவிருப்பத்தில், வீழ்ந்துபோகும் -
மூழ்கியிறந்துபோகின்ற, வன்நெஞ்சற்கு - (கொடுமையாகிய மோஹனீய பரிணாமமுடைய) கடினநெஞ்சையுடையவனுக்கு, மாற்றிடை -முத்திக்கு
மாற்றமாகிய இந்த ஸம்ஸாரத்தில், சுகமும் - புண்ணியப் பகுதியாகிய
சுகங்களும், இல்லை - உண்டாவதில்லை, என்றான் - என்றும்
கூறினான், எ-று.
கண்டாய் - அசை. (61)
|