418. அருந்தவந் தானஞ் சீல மறிவனற் சிறப்பி வற்றாற்
றிருந்திய மனத்தி னாரைத் திருவென்றும் பிரிதல் செல்லாள்
பொருந்தியே நிற்கும் பூமி புகழொடுங் கீர்த்தி போகிப்
பரந்தென்று மவர்க ணீங்கா பகைவரும் பணிவர் கண்டாய்.
(இ-ள்.) (அங்ஙனமுரைத்து மேலும்) அருந்தவம் - அரிதாகிய
தபஸும், தானம் - நால்வகைத்தானங்களும், சீலம் - சீலாசார முதலிய
விரதங்களும், அறிவன் நற்சிறப்பு - கேவல ஞானமுடைய
அருகத்பரமேஷ்டிக்குச் சிறப்புச் செய்தல் என்னும் பூஜாபரிணாமமும்,
(ஆகிய) இவற்றால் - இவைகளால், திருந்திய - திருத்தமாகிய,
மனத்தினாரை - மனதையுடைய புண்ணிய பரிணாமமுடையவர்களை,
திரு - இலக்குமி, என்றும் - எப்பொழுதும், பிரிதல் செல்லாள் -
நீங்கமாட்டாள், பொருந்தியே நிற்கும் - அவர்களிடத்துச் சேர்ந்து
நிலை பெற்றேயிருப்பாள்,அவர் கண் - அப்படிப்பட்ட சுபப்பரிணாம
முடையவரிடத்தே, கீர்த்தி போகிப் பறந்து - கீர்த்தியானது எங்கும்
போய்ப்பரவ, புகழொடும் - அந்தக்கீர்த்தியும், பூமி - இந்தப் பூமி
ராஜ்ஜியமும், என்றும் - எப்பொழுதும், நீங்கா - நீங்கமாட்டா,
பகைவரும் - சத்துருக்களும், பணிவர் - வணங்குவார்கள், எ-று. (62)
419. வேட்கையும் வெகுளி தானும் வெஞ்சொலு மஞ்சொ லார்மேற்
றாட்சியு முதல மன்னர்த் திருவினைத் தவறு செய்யும்
சூட்சியும் பெருமை தானு முயற்சியு மமைச்சு மாதி
மாட்சியைச் செய்து மன்னர் செல்வத்தை வளர்க்கு மென்றான்.
(இ-ள்.) வேட்கையும் - வியவஹாரப் பழுதாகிய
அத்தியாசையும், வெகுளிதானும் - கோபமும், வெஞ்சொலும் -
கடுஞ்சொல்லும், அம் - அழகிய, சொல்லார் மேல் -
சொற்களையுடைய ஸ்திரீகளின் மேல், தாட்சியும் - மோகத்தினாலே
அவர்களிடத்து வணக்கங்காட்டுதலும், முதல் - முதலிய செய்கைகள்,
மன்னர் - அரசர்களுடைய, திருவினை - ஐசுவரியத்தை, தவறுசெய்யும்
- கெடுத்துவிடும், சூட்சியும் - ( மேற்சொன்ன கெட்ட
குணங்களினின்றும் நீங்கும்) உபாயமும், பெருமை தானும் - உயர்ந்த
நற்குணமும், முயற்சியும் - விடாமுயற்சியும், அமைச்சும் -
மந்திராலோசனையும், ஆதி - முதலானவைகள், மாட்சியைச் செய்து-
அழகைச் செய்து, மன்னர் செல்வத்தை -இராஜாக்களுடைய சம்பத்தை,
வளர்க்கும் - விருத்தியடையச் செய்யும், என்றான் - என்றும்
சொன்னான், எ-று. (63)
420. இனையன பலவுஞ் சொல்லி யெழின்முடி தம்பிக் கீந்து
கனைகழ லரசர் சூழக் காவலன் போகி யந்த
முனிவரன் சரண மூழ்கி முடிமுதற் றுறந்து நின்றான்
சினைமிசை யணியை நீத்த செறிந்தகற் பகத்தை யொத்தான். |