194மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  இனையன  -  இத்தன்மையனவாகிய,  பலவும்  -   பல
நீதிகளையும்,  சொல்லி  -  உரைத்து,  (பின்னர்),  எழில்  -  அழகு
பொருந்திய,  முடி  -  இராஜபட்டாபிஷேக  கிரீடத்தை,  தம்பிக்கு -
தம்பியான    பூரணசந்திரனுக்கு,    ஈந்து  -  கொடுத்து,  கனை  -
சப்தியாநின்ற,   கழல்   -  வீரகண்டையை   அணிந்த,    அரசர் -
இராஜாக்கள்,   சூழ   -   தன்னைச்   சூழும்படியாக,  காவலன்  -
சிம்மச்சந்திரவாசன்,  போகி  -  போய்,  அந்தமுனிவரன்  -  முன்பு
தனக்குத்  தர்மஞ்  சொன்ன அந்தப் பூரணசந்திர முனிவரது, சரணம்
மூழ்கி  -  பாதத்திற்  படிந்து,  முடி  முதல் -  சிகைமுதலாகப் பல
அணிகளையும்,  துறந்து - விதியின்படி பரிகரித்து, நின்றான் - தீக்ஷை
கைக்கொண்டு  நின்றவனாய்,  சினைமிசை  - கிளைகளின் மேலுள்ள,
அணியை   -   ஆபரணாதிகளை,   நீத்த  -  நீக்கிய,  செறிந்த  -
கிளையடர்ந்த,   கற்பகத்தை   -  கற்பக  விருக்ஷத்தை,  ஒத்தான் -
நிகர்த்தான், எ-று. (64)

 421. பணமிசை மணிதோல் நஞ்சு பரிந்ததோர் பணியைப் போல
     மணிமுடி யாடை குஞ்சி மனத்திடை மாசு நீக்கிக்
     குணமணி யிலக்க மெண்பத் தீரிரண் டணிந்து கோமான்
     பணிவினாஞ் சீல மாலை பதினெண்ணா யிரந் தரித்தான்.

   (இ-ள்.)   (அவ்வாறு   தவத்திற்  சென்ற  அவன்)  பணமிசை -
பணாமுடியின்  மேலுள்ள,  மணி  -  இரத்தினத்தையும்,    தோல் -
உடம்பிலுள்ள   சட்டையையும், நஞ்சு - பற்களிலுள்ள விஷத்தையும்,
பரிந்தது  -  விட்டு  நீங்கியதாகிய,  ஓர்  - ஒரு, பணியைப்போல -
சர்ப்பத்தைப்போல,  மணிமுடி  -  இரத்தின கிரீடத்தையும், ஆடை -
வஸ்திரத்தையும்,    குஞ்சி  -  மயிர்  முடியையும்,   மனத்திடை  -
மனத்திலுண்டாகிய,  மாசு  - அப்பியந்தரப் பற்றுக்களையும், நீக்கி -
பரிகரித்து, எண்பத்தீரிரண்டு இலக்கம் -எண்பத்து நான்கு லக்ஷமாகிய,
குணம்மணி  -  குணவிரதங்ளென்னும்  இரத்தினங்களை, அணிந்து -
தரித்து,  கோமான்  -  சர்வக்ஞனாகிய  இறைவனது,  பணிவினாம் -
வணக்கத்தினாலுண்டாகின்ற,             பதினெண்ணாயிரம்     -
பதினெண்ணாயிரமாகிய,      சீலமாலை    -     சீலாசாரமென்னும்
மாலைகளையும், தரித்தான் - அணிந்தான், எ-று. (65)

 422. தயாவெனுந் தைய லாளைச் சாலவுஞ் செறிந்து தன்க
     ணுசாவெனு முறுதித் தோழ னுடன்புணர்ந் துறக்க மென்னு
     மயால்செய்யு மடந்தை தன்னை மனத்தகத்தகற்றி மாண்பி
     னயாவுயிர்த் திருக்கை வைத்தா னருந்தவக் கொடியை யண்ணல்.

    (இ-ள்.)  தயாவெனும் - ஜீவதயவென்கிற, தையலாளை - மாதை,
சாலவும்   -    மிகவும்,    செறிந்து   -   அடைந்து,  தன்கண் -
தன்னிடத்தேயுள்ள,   உசாவெனும்   -  ஆராய்தலென்கிற,  உறுதி -
உறுதியாகிய, தோழனுடன் - சிநேக