னுடனே, புணர்ந்து - சேர்ந்து, உறக்கமென்னும் - நித்திரையென்கின்ற,
மயால் செய்யும் - மயக்கத்தைச் செய்கின்ற, மடந்தைதன்னை -
மாதை, மனத்தகத்து - மனத்தினுள்ளே, அகற்றி - இல்லாமல் போக்கி,
மாண்பின் - ஸ்வசம்வேதன ஞானப்பிரத்தியக்ஷமென்னும்
மாக்ஷிமையினால், அயாவுயிர்த்து - இளைப்பாறி, அண்ணல் -
பெருமையிற் சிறந்தவனாகிய அச்சிம்மச்சந்திர முனிவான், அரும் -
தாங்குதற் கரிதாகிய, தவக்கொடியை - தபஸாகிற ஸ்திரீயை, இருக்கை
வைத்தான் - தன்னிடத்திலே இருக்கையாகச் சேர்த்து
வைத்துக்கொண்டான், எ-று. (66)
வேறு.
423. வினைகளுக் குதிர்ச்சி வேட்கை நீக்கிமெய் வசம்வரல் புனைவரும் பொறிச் செறிப் புயிர்க்கழிவு போற்றுதல்
நினைவின தொருக்கமு நெறிவிளக்க முஞ்செயு
மனசன தவத்தினோ டருந்தவன் பொருந்தினான்.
(இ-ள்.) (மேலும்) வினைகளுக்கு - சில கர்மங்களுக்கு, உதிர்ச்சி
- நிர்ஜரையாக, வேட்கை - ஆசையை, நீக்கி - விலக்கி, மெய் -
சரீரமானது, வசம் வரல் - ஆத்மாப்பியாச அறிவு காட்சிகளில்
வியவகரிப்பதற்கு வசமாக வருதலும், புனைவரும் - சேர்க்கையாக
வராநின்ற, பொறி - பஞ்சேந்திரியங்களின், செறிப்பு - அடக்கமாகிய
விஷய ஸம்யமமும், உயிர்க்கு - ஸ்தாவர சங்கம ஜீவன்களுக்கு
(ஏற்படும்), அழிவு - கெடுதியை (நீக்கி), போற்றுதல் - அவற்றைப்
பாதுகாத்தலாகிய பிராணி சம்யமமும், நினைவினது - தியானத்தினது,
ஒருக்கமும் - சேர்க்கையும், நெறி - மோட்ச மார்க்கத்தினது,
விளக்கமும், - பிரகாசமுமாகிய (இவைகளை யெல்லாம்), செய்யும் -
செய்தற்குக் காரணமாகிய, அனசன தவத்தினோடு - அன்னம்
புசியாமல் உபவாசமிருந்து செய்யும்படியாகிய முதல் பாஹிய
தவத்தினோடு, அருந்தவன் - அரிய தவத்திற்குரிய அம்முனிவரன்
பொருந்தினான் - சேர்ந்தான், எ-று.
அசனம் - அன்னம் புசித்தல்,
அனசனம் - அன்னம் புசியாத உபவாசம். (67)
424. புகாமிகிற் பொறிமிகு மனசனம் பொருந்திடின்
நெகாவுடன் புடன்படாது நாட்க ணீதி மாதவன்
புகாவினைச் சுருக்க மெய் யுடன்படும் பொறிகளும்
மிகாவென விரும்பியாவ மோதுரிய மேவினான்.
(இ-ள்.) புகா - அசனமானது, மிகின் - மிகுந்தால், பொறி -
இந்திரியங்கள், மிகும் - விஷயங்களில் விருத்தியடையும் (அதனால்
ராகாதிகள் அதிகமாகும்; அதனால் கர்மபந்தத்துக்குக் காரிய
காரணமாகும்), அனசனம் - உபவாசத்தையே, பொருந்திடில் -
சர்வதா அனுஷ்டித்தால், உடம்பு - இச்சரீரமானது, நெகா -
|