(இ-ள்.) (அதன் மேலும்) வேனல் - வெய்யில், வெம்பும் -
மிகுதியாக தகிக்கின்ற, கால் - காலமாகிய கிரீஷ்மத் காலத்திலே
(அதாவது கோடைக்காலத்தில்), மலை - பர்வதத்தின் மேல், வெய்யில்
- வெய்யிலில்,நிலையின் - நிற்பதாகிய ஆதபயோகத்தில், மேவியும் -
பொருந்தியும், வானம் - ஆகாயத்தினின்றும், மாரி - மழையானது,
சோருநாள் - பொழிகின்ற வருஷாகாலத்தில், (அதாவது
மழைக்காலத்தில்), மரம்முதல் - மரத்தினடியில், மருவியும் - சேர்ந்து
நின்றும், ஊன் - மாமிசத்தை, உருக்கும் - உருகச் செய்யும் (அதாவது
கரைக்கும்), வன் - கடுமையாகிய, பனி - பனிக்காலத்தில், கடற்புறத்து
- சமுத்திரத்தின் பக்கத்திலுள்ள, வெள்ளிடை - யாதொரு
மறைவுமில்லாத வெளியிடத்தில், மருவியும் - சேர்ந்தும்,
கானயானைபோல் - காட்டில் வசிக்கும் யானையைப்போல, மூன்றுகாலயோகு - திரிகால யோகங்களையும், தாங்கினான் -
தரித்தான், (அதாவது காயக்கிலேசமென்னும் ஆறாவது
பாஹியதபஸையும் பொருந்தினான்), எ-று.
?மருவியும்? என்பது
இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (72)
429. அரியவா யுலகெலாம் விலையிலா வருங்கலத்
திரயமெய் யணிந்தவர் செய்கைசொன் மனங்களான்
மரியமா சினைக்கெடுக்கு மத்திவார மாகிய
பெரியவர் மனங்கொளப் பெருந்தவம் பொருந்தினான்.
(இ-ள்.) (பின்னரும்) அரியவாய் - பெறுதற்கருமையானவைகளாகியும்,
உலகெலாம் - இந்த மூன்று லோகமும், விலையிலா -
விலைப்பொருளாகக் கொடுப்பதற்குப் பொருந்தாதனவாகியும்
(இருக்கின்ற),அருங்கலத்திரயம் - அரிதாகிய ரத்தினத்திரயத்தை; மெய்
- மெய்யில், அணிந்தவர் - தரித்தவர்கள், செய்கை -
காரியத்திற்கேதுவாகிய சரீரத்தாலும், சொல் மனங்களால் -
வசனத்தாலும் மனதாலும் (அதாவது : மனவசனகாயங்களால்), மரிய -
ஏதோசலன வசத்தால் சேர்ந்த, மாசினை - குற்றத்தை (அல்லது
ஆஸ்ரவத்தை), கெடுக்கும் - போக்கும்படியான, அத்திவாரமாகிய -
அஸ்திவாரமாகிய, (அதாவது அடிப்படையாகிய அல்லது
முதன்மையாகிய பிராயச்சித்தமென்னும்), பெரியவர் -
தத்துவஞானிகளாகிய பெரியோர்கள், மனங்கொள் -
மனதிற்கொள்கின்ற, அப்பெருந்தவம் - அந்தப் பெரிதாகிய
அப்பியந்தர தபத்தை, பொருந்தினான் - சேர்ந்தான், எ-று.
காரியத்தால் வந்த குற்றம் அதன் காரணத்தை யோசித்து
விடுத்தால் தீருமென்பது இதனால் பெறப்பட்டது. இந்தப்பிராயச்சித்த
லக்ஷணம் பதார்த்த சாரத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (73)
430. பெறற்கரிய காட்சிமெய் யுணர்ச்சிநல் லொழுக்கின்மே
லிறப்பெய்தாமை மெய்ம்மொழி மனத்துழந் திறைஞ்சுதல்
|