பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 203


Meru Mandirapuranam
 

சரிக்கும்   நாளுள் -   சஞ்சரிக்கின்ற  நாட்களில்,  போர் -  போர்
செய்யக்கூடிய,  அணி  -  அழகிய,  யானை  - யானையையுடைய,
வேந்தன்  -  அரசனாகிய,  பூரசந்திரன்றன்  - பூரணசந்திரனுடைய,
சிந்தை  -  மனமானது,  வாரணி  -  இரவிக்கையை    அணிகின்ற,
முலையினார்தம் - ஸ்தனங்களையுடைய ஸ்திரீமார்களின், வசம்சென்று
-     வசத்திற்போய்,  நின்று   -    நிலைபெற்று,   மயங்கும்   -
மயங்குவதாயிருந்தது, எ-று. (80)

 437. இசையின்மே லசுண மாவு மிளையவர் முலையி னின்பப்
     பசையின்மா சுணமுங் கண்ணின் புலங்களிற் பறந்து வந்து
     விசையினால் விளக்கின் வீழும் விட்டிலும் போன்று வேந்தன்
     இசையுநா ளிராம தத்தை முனியைவந் திறைஞ்சி னாளே.

   (இ-ள்.)   இசையின்மேல் -  சங்கீதத்தின்மேல்,  அசுணமாவும் -
கேகயபக்ஷியும், இளையவர் - இளமைப்பருவத்தையுடைய ஸ்திரீகளின்,
முலையின் - ஸ்தனங்களிலுண்டாகும், இன்பப்பசையில் - சுகப்பற்றில்,
மாசுணமும்  -  ஸர்ப்பமும், கண்ணின்புலங்களில்  - நேத்திரேந்திரிய
விஷயங்களில்,  பறந்துவந்து  -  பறத்தலாகி வந்து,  விசையினால் -
வேகத்தினால், விளக்கின்வீழும்  -  தீபத்தில் வீழ்கின்ற, விட்டிலும் -
விட்டிற்பூச்சியும், (பற்றுவைத்திருப்பதை) போன்று - நிகர்த்து,வேந்தன்
- பூர்ணச்சந்திரவாசன்,  இசையும்  நாள் -  (அவ்வாறு)  ஸ்திரீகளின்
இச்சையில்    பொருந்தியிருக்கின்ற    காலத்தில்,  இராமதத்தை  -
இராமதத்தாரியாங்கனை,   வந்து   -  வந்து   சேர்ந்து,  முனியை -
சிம்மச்சந்திர மகாமுனியை, இறைஞ்சினாள் - வணங்கினாள், எ-று.
                                                    (81)

 438. புடையவர் மெலியப் பொங்குங் கடையவர் செல்வம் போல
     இடையது மெலிய வீங்கி யெழுந்திணைந் திருந்த கொங்கை
     கடையவ ரிட ருறத்தங் கீழடி யடைய தேபோல்
     இடையடி யடையக் கண்டு துறந்தவெம் மிறைவ போற்றி.

    (இ-ள்.)  (அவ்வாறு  வணங்கியவள்   அம்முனியை   நோக்கி)
புடையவர் -  பக்கத்திலுள்ள பெரியோர், மெலிய - மெலிவையடைய,
பொங்கும் -     (அதனால்)       அதிகரிக்கும்,     கடையவர்  
- தாழ்ந்தகுணமுடையவர்களுடைய,        செல்வம்போல         -
செல்வத்தைப்போல, இடையது - இடுப்பானது, மெலிய - மெலியும்படி
(அதாவது : தளரும்படி), வீங்கி - பருத்து, எழுந்து -  மார்பினிடமாக
வுண்டாகி, இணைந்திருந்த - இரட்டையாகச்  சேர்ந்திருந்த, கொங்கை
- தனங்கள்,   கடையவர்  -   மேற்கூறிய  கீழ்மக்கள்,  இடருற  -
கேடடைய,  தம்கீழ்  -  அப்போது  அந்தப்  பெரியோர்  தங்களின்
கீழுள்ள,  அடி  -  பாதத்தில்,  அடைவதேபோல்  -    சரணமாகச்
சேர்வதைப்போல, இடையடி - இடையினது அடியில், அடையக்கண்டு
- சேரப்பார்த்து,  (பெண்களின்  பெருமிதம்  இவ்வளவுதான்   என்று
வெறுத்து வைராக்கிய