முற்று), துறந்த - ஸம்ஸார வாழ்வை நீத்த, எம் இறைவ - எங்கள்
சுவாமியே!, போற்றி - உன்னைத் துதிக்கின்றேன், எ-று. (82)
439. காம்பெனத் திரண்டு மைந்த ருள்ளத்தைக் கனற்று மென்றோன்
பாம்பின துரியைப் போலப் பசையற்றுத் திரையக் கண்டுந்
தேம்பலில் மொழியி னார்தந் திறத்துளி வெறுத்துப் போந்து
காம்புடை யடவி சேர்ந்த காவல பாதம் போற்றி.
(இ-ள்.) காம்பென - மூங்கிலைப்போல, திரண்டு -
திரட்சிபொருந்தி, மைந்தர் - விடபுருஷர்களுடைய, உள்ளத்தை -
மனதை, கனற்றும் - விருப்பத்தால், வெதும்பச் செய்கின்ற, மென் -
மிருதுவாகிய, தோள் - ஸ்திரீகளின் தோள்கள், பாம்பினது -
பாம்பினுடைய, உரியைப்போல - சட்டையைப்போல, பசையற்று - இரத்தப்பற்றற்று, திரைய - பின்னே திரைதலையடைய, கண்டும் -
பார்த்தும், தேம்பலில் - வாடுதலில்லாத, மொழியினார்தம் -
வார்த்தைகளையுடைய அந்த ஸ்திரீகளினது, திறந்து - நிலையற்ற
வனப்பின் விதத்தில், உள்ளி - நினைத்து, வெறுத்து - விராகமுற்று,
போந்து - அவர் கூட்டுறவை விட்டு நீங்கி வந்து, காம்புடை -
மூங்கில்களை மிகுதியாகவுடைய, அடவி - காட்டில், சேர்ந்த -
அடைந்து தவஞ் செய்கின்ற, காவல - ரக்ஷகனே!, பாதம் -
உன்னுடைய அடிகளை, போற்றி - துதிக்கின்றேன், எ-று.
கண்டும் என்பதிலுள்ள உம்மை - இறந்தது தழுவிய எச்சப்பொருளது.
(83)
440. பெரியவர் பாதஞ் சேர்ந்த பேதையர் சிந்தை போலக்
கரியமென் கூந்தல் காலத் தாற்கறுப் பொழியக் கண்டும்
புரவலர் செல்வம் பார்க்கிற் புற்புதம் போலு மென்றும்
மருவிய வரசு நீத்த மாதவ பாதம் போற்றி.
(இ-ள்.) பெரியவர் - ஞானவந்தர்களுடைய, பாதம் - அடியை,
சேர்ந்த - அடைந்த, பேதையர் - அறிவில்லாதவர்களுடைய,
சிந்தைபோல - மனதைப்போல, (அதாவது : அம்மனமானது
பரிசுத்தமாவது போல), கரிய - கறுப்புநிறமுள்ள, கூந்தல் -
அளகமானது, காலத்தால் - கால முதிர்ச்சியின் சேர்க்கையால்,
கறுப்பொழிய - தனது கருமை நிறம் நீங்க, கண்டும் -
அதனைப்பார்த்தும், பார்க்கின் - ஆராயுமிடத்து, புரவலர் செல்வம் -
இராஜாக்களுடைய ஐசுவரியமும், புற்புதம்போலும் - நீர்க்குமிழியை
நிகர்க்கும், என்றும் - என்று நினைத்துச் செல்வம் நிலையாமையை
அறிந்தும், மருவிய - சேர்ந்திருந்த, அரசு - இராஜஐசுவரியத்தை,
நீத்த
- விட்டுத் தவங் கைக்கொண்ட, மா - சிறந்த, தவ -
தவத்தையுடைய
ஸ்வாமியே!, பாதம் - உன் அடிகளுக்கு, போற்றி,
ஸ்துதி
செய்கின்றேன், (என்று பலவாறு துதித்தனள்), எ-று. (84)
|