பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 205


Meru Mandirapuranam
 

 441. ஏத்தருங் குணனை யிவ்வா றேத்திய விராம தத்தை
     பார்த்தறம் பகரக் கேட்டுப் பணிந்தன ளிருந்து பின்னும்
     வார்த்தையுண் டிறைவ கேளுன் மாதவத் திடையூ றேனும்
     பாத்திபக் குமரன் பால தெனமுனி பகர்க வென்றான்.

   (இ-ள்.)   ஏத்தரும்  -  துதித்தற்  கருமையாகிய,   குணணை -
ஸம்மியக் குணத்தையுடைய  ஸிம்மச்சந்திர  முனிவரனை, இவ்வாறு -
இந்தப் பிரகாரம்,      ஏத்திய  -      துதித்த,      ராமதத்தை -
இராமதத்தையானவள்,  பார்த்து  -   அம்முனிவன் தன்னைப்பார்த்து,
அறம்   -  தர்மத்தை,   பகர -  சொல்ல,  கேட்டு -  கேட்டறிந்து,
பணிந்தனள் -    அவனை  மீண்டும்  வணங்கியவளாய், இருந்து  -
அவன் சமீபத்திலுட்கார்ந்து,  பின்னும்  - மேலும் (அவனை நோக்கி,
இறைவ சுவாமி!,  பார்த்திபகுமரன்  பாலது -  இராஜ   குமாரனாகிய
பூரணசந்திரனிடத்தைச்  சார்ந்ததாகிய,  வார்த்தை -  சில மொழிகள்,
உண்டு -  இருக்கின்றன,  (அவற்றைக்  கேட்பது) உன்  மாதவத்து -
உன்னுடைய  சிறந்த  தபஸினது, இடையூறேனும் - விக்கினமாயிருந்த
போதிலும்,  கேள் -  கேட்பாயாக,  என - என்று சொல்ல,  முனி -
அம்முனிவன்   (அவளை   நோக்கி),  பகர்க   - அம்மொழிகளைச்
சொல்வாயாக, என்றான் - என்று உரைத்தான், எ-று. (85)

 442. மங்கலத் தொழில்கள் முற்றி மணிமுடி கவித்து வந்து
     திங்கள்வெண் குடையி னீழற் சீயவா சனத் திருந்தான்
     பொங்குசா மரைகள் வீசப் பொன்மலைக் குவடு தன்னிற்
     சிங்கவே றிருந்த தொத்தான் சீயமா சேனன் மைந்தன்.

    (இ-ள்.)  (அப்போது  இராமதத்தை  அம்முனிவரனை  நோக்கி)
சீயமாசேனன்   -   சிம்மச்சந்திர   மகாராஜனுடைய,  மைந்தன்  -
குமாரனாகிய  பூரணசந்திரன், மங்கலத்தொழில்கள் - அரசர்களுக்குத்
தினந்தோறும்  உண்டாகிய  மங்கல காரியங்களை, முற்றி - முடித்து,
மணிமுடி - இரத்தின  கிரீடத்தை,  கவித்து - சிரசிற்சூட்டி,  வந்து -
கொலுமண்டபத்திற்கு  வந்து  சேர்ந்து,  திங்கள் - சந்திரன் போன்ற,
வெண்குடையின் -வெள்ளைக் குடையினது, நீழல் - நிழலில், பொங்கு
- அதிகரிக்கின்ற,     சாமரைகள் -  சாமரைகளை,   வீச  -  வார
விலாஸனிகள் வீச, சீய ஆசனத்து - சிங்காசனத்தின்மேல், இருந்தான்
- இருந்தவன்,   பொன்மலை -   மஹா   மேரு  பர்வதத்தினுடைய,
குவடுதன்னில் - சிகரத்தின்மேல்,சிங்கவேறு - ஒரு ஆண்சிங்கமானது,
இருந்தது - இருந்ததை, ஒத்தான் - நிகர்த்தான், எ-று. (86)

 443. இளஞ்சிங்க வேற்றைச் சூழ்ந்த விரும்புலிப் போத கம்போற்
     களங்கண்டு முழங்கும் யானைக் காவல குமரர் சூழ்ந்தார்