செருவிடை - யுத்தரங்கத்தில், வெல் - சத்துருக்களைச்
செயிக்கும்படியான, வலம் - வன்மைபொருந்திய, திறலும் -
பராக்கிரமமும், சிந்தைசெய் - மனதினால் நினைக்கின்ற, பொருளவை
- பொருளாகிய அவைகள், வருதலும் - வந்து சேர்வதும், போகமும்
- சுகானுபவமும், நல்ல - நன்மையாகிய, திருவுடை - லக்ஷணமுள்ள,
அறத்தது - ஸ்ரீஜிந தருமத்தினது, செய்கை - காரியமாகும், என்றனன்
- என்றும் யான் சொன்னேன், எ-று. (91)
448. நிலத்திடை யங்குரம் வித்தை நீத்திலை
மலைத்தலை மழையிலா தாறு தான்வரா
புலத்திடை யின்பமு மில்லை புண்ணியந்
தலைத்தலை வரச்செயா தவர்கட் கென்றனன்.
(இ-ள்.) (மேலும்) நிலத்திடை - இப்பூமியில், வித்தை நீத்து -
விதையை நீக்கி, அங்குரம் - முளையானது, இல்லை -
உண்டாவதில்லை, மலைத்தலை - பர்வதத்தின்மேல், மழையிலாது -
மழைபெய்தல் இல்லாமல், ஆறுதான் - மலையருவியானது, வரா -
பெருகிவரமாட்டாது, (இவற்றைப்போல), புண்ணியம் - புண்ணிய
ஹேதுவாகிய சம்யக்துவத்துடனே கூடிய விரதாதிகளை, தலைத்தலை
- ஒவ்வோரிடத்திலும், வர - மேவும்படி, செய்யாதவர்கட்கு -
செய்யாதவர்களுக்கு, புலத்திடை யின்பமும் - பஞ்சேந்திரிய
விஷயங்களிலான சம்ஸார சுகமும், இல்லை - உண்டாவதில்லை,
என்றனன் - என்றும் சொன்னேன், எ-று. (92)
449. காரண மில்லையே லில்லை காரியம்
போரணி வேலினாய் முன்செய் புண்ணியங்
காரண மாகநீ ருடுத்த கன்னியுஞ்
சீரணி செல்வமுஞ் செறிந்த வுன்னையே.
(இ-ள்.) (இவ்வாறு சொல்லிப் பின்னர்) காரணமில்லையேல் -
காரியத்திற்குக் காரணமாகிய தன்மை இல்லாவிட்டால், காரியம் -
அக்காரணத்தாலாகும் காரியம், இல்லை - உண்டாவதில்லை, போர் -
யுத்தத்தில், அணி - அழகு பொருந்திய (அதாவது : வெற்றியழகு
பெற்ற), வேலினாய் - வேலாயுதத்தையுடைய குமரனே!, முன் -
பூர்வத்தில், செய் - உன்னால் செய்யப்பட்ட, புண்ணியம் -
புண்ணியமானது, காரணமாக - ஹேதுவாக, நீருடுத்த கன்னியும் -
சமுத்திரஞ்சூழ்ந்த இப்பூமிதேவியும் (அதாவது : பூமி ராஜ்யமும்), சீர்
அணி - சிறப்பைக் கொண்ட, செல்வமும் - இந்த ராஜ ஐஸ்வர்யமும்,
உன்னைச் செறிந்த -இப்போது அக்காரணத்தின் காரியமாக உன்னைச்
சேர்ந்திருக்கின்றன, எ-று. (93)
450. மண்ணின்மேல் மற்றிந்தச் செல்வ மேல்வர
வெண்ணிநீ புண்ணிய மீண்டச் செய்கெனப்
|