210மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

தவத்தையுடைய   சிம்மச்சந்திர  முனிவன்,  மனத்தை   நோக்கும் -
பிறருடைய   மனோநிலையைப்  பார்த்தறியும்படியான,  போதியின் -
மனப்பரியாய  ஞானத்தால்,  உணர்ந்து - தான் தெரிந்து, அறத்தை -
ஸ்ரீ ஜிநதருமத்தை, புரவலன் - பூரண சந்திரனாகிய அரசன், புரிந்து -
விரும்பி,  கொள்ளும்  -  கைக்கொள்ளுவான், யாதும் - எவ்வளவும்,
நீகவல வேண்டா - நீ வருத்தப்படவேண்டாம், அதனுக்கே -அதற்கே,
ஏதுவாக - காரணமாகும் படியாக,ஓதும் -என்னால் சொல்லப்படுகின்ற,
இக்கதையைக் கேட்டு - இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நீ -நீ,அவற்கு
- அக்குமாரனுக்கு, உரைக்க - சொல்லுவாயாக, என்றான் - என்று
சொன்னான், எ-று. (96)

 453. அடக்கத்தைப் பொதிந் துயிர்க்க ணருளினை யூறி யாறித்
      தொடக்கமு முடிவு மொத்துத் தொடுத்ததோர் மாலை தன்னை
      எடுத்துட னாற்றி னாற்போன் றிதத்தையெவ் வுயிர்க்கு மாக்கும்
     வடுப்பரிந் திருந்த சொல்லான் மாதவ னுரைக்க லுற்றான்.

    (இ-ள்.)  (அவ்வாறு  சொல்லி)  அடக்கத்தை  -   சம்யமத்தை,
பொதிந்து -    (தன்னிடத்தே)    சேர்த்து,   உயிர்க்கண்  -   சகல
ஜீவன்களிடத்திலும்,  அருளினை - தயவை, ஊறி - மனத்தில் சுரந்து
(அதாவது :  உண்டுபண்ணி),  ஆறி  -  அதனால்  ஆறுதலடைந்து,
(அதாவது :  பகையென்பதின்னிச்  சமத்துவி பரிணாமத்தில் தணிந்து),
தொடக்கமும் - ஆரம்பமும், முடிவும் - முடிதலும், ஒத்து - சமமாக,
தொடுத்தது -    தொடுக்கப்பட்டதாகிய,  ஓர்  மாலை  தன்னை  -
ஒருமாலையை,  எடுத்து  -  தூக்கி,  உடன்  -   ஒரு தன்மையாக
(அதாவது:       வக்கிரமில்லாமல்)        நாற்றினாற்போன்று   - தொங்கவிடுவதைப்போன்று, இதத்தை - நன்மையை, எவ்வுயிர்க்கும் -
சகல   ஜீவன்களுக்கும்,  ஆக்கும் -  உண்டாக்குகின்றவனும், வடு -
குற்றங்களையெல்லாம்,    பரிந்து  -   விட்டு   நீங்கி,   இருந்த  -
நற்குணத்தைச்      சேர்ந்திருந்த,    சொல்லான்   -    வசனத்தை
யுடையவனுமாகிய,   மாதவன்  -  மஹா தபஸையுடைய சிம்மச்சந்திர
முனிவரன்,  உரைக்கலுற்றான்  -  மேலே  அக்கதையைச்  சொல்லத்
தொடங்கினான், எ-று. (97)

நான்காவது :

பூரணசந்திரன் அரசியற்சருக்கம் முற்றுப்பெற்றது.