ஐந்தாவது :
நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம்
454. வாசநின் றறாத சோலை மழையென மதுக்கள் பெய்து
மூசுதேன் முழங்க மஞ்ஞை முகிலென வகவி முத்தின்
றூசுலா மலங்க லார்போற் றொடங்கிய நடங்க ளோவாக்
கோசலை யென்ப துண்டிக் குவலயம் புகழு நாடே.
(இ-ள்.) வாசம் - பரிமளமானது, நின்று - வியாபித்து நின்று,
அறாத - பற்றாறாத, சோலை - தோப்புக்களில், மதுக்கள் - தேன்கள்,
மழையென - மழையைப்போல, பெய்து - சொரிந்து, மூசும் - அதில்
மொய்த்திரா நின்ற, தேன் - தேனீக் கூட்டங்கள், முழங்க - சப்திக்க,
(அம்முழக்கத்தை), மஞ்ஞை - மயில்கள், முகிலென - மேக
கர்ஜனையென்று, (நினைத்து), அகவி - சிறகு விரித்தாடி, முத்தின் தூசு
- முன்றானையில் முத்துக்கட்டி நெய்யப்பட்டிருக்கும் வஸ்திரத்தை
அணிந்தவர்களும், உலாம் - மார்பில் அணியப்பட்டசைகின்ற,
அலங்கலார்போல் - மாலையை யணிந்தவர்களுமாகிய
நர்த்தனமாதர்கள்போல, தொடங்கிய - ஆரம்பிக்கப்பட்ட, நடங்கள் -
நடனங்கள், ஓவா - இடைவிடாததும் (அதாவது : நீங்காததும்),
இக்குவலயம் - இப்பூமியிலுள்ளவர்கள், புகழும் - புகழ்ந்து
கூறத்தக்கதும், கோசலை என்பது - கௌசலையென்று
சொல்லக்கூடியதும், (ஆகிய) நாடு - ஒரு தேசமானது, உண்டு -
உள்ளது, எ-று. (1)
455. திருத்தகு நாடி தற்குத் திலதமாய்த் திகழ்ந்து சென்றார்
வருத்தந்தீர் மாட மூதூர் மறையவ ருறையு மாண்ட
விருத்தநற் கிராமந் தன்னுள் மிருகாயண னென்று மிக்கா
னொருத்தனங் குளனற் சாந்தி யுருவுகொண் டனைய நீரான்.
(இ-ள்.) திருத்தகும் - செல்வம் பொருந்திய, நாடு - தேசமாகிய,
இதற்கு- இந்தக் கோசல நாட்டுக்கு, திலதமாய் - நெற்றிப்பொட்டுக்குச்
சமானமாகி, (அதாவது : மிக அழகாகி), திகழ்ந்து - பிரகாசித்து,
சென்றார் - அதில் அடைபவர்களது, வருத்தம் - சிரமங்கள், தீர் -
நீங்கும்படியான, மாடம் - உப்பரிகைகளையுடைய, மூதூர் -
பழமையாகிய ஊரானது, மறையவர் - பிராம்மணர்கள், உறையும் -
தங்கியிராநின்ற, மாண்ட - மாட்சிமையுடைய, நல் - நன்மை
பொருந்திய, விருத்தக்கிராமம் - விருத்த கிராமமாகும், தன்னுள் -
அதனுள்ளே, மிருகாயணனென்று - ம்ருகாயணனென்று பெயர்
கூறப்பட்டு, மிக்கான் - பெரியோனாகிய |