வனும், நற்சாந்தியுருவு கொண்டனைய நீரான் - நன்மையாகிய
க்ஷமையே ஒரு ரூபங்கொண்டு வந்ததை நிகர்த்த குணமுடையவனும்,
(ஆகிய), ஒருத்தன் - ஒரு பிராமணன், உளன் - உளனாயினான்
(அதாவது : இருந்தான்), எ-று.
அங்கு - அசை. (2)
456. அதிர்பட நடத்த லில்லா ளவன்மனைக் கிழத்தி யஞ்சொன்
மதுரையென் றுரைக்கப் பட்டாள் மகளும்வா ருணியா முத்தின்
கதிர்நகைக் கருங்கட் செவ்வாய்க் கால்பரந் தெழுந்து பொன்னின்
பிதிர்பரந் திருந்த கொங்கைப் பிணையனா ளொருத்தி யானாள்.
(இ-ள்.) அதிர்பட - அதிர்ச்சிபடும்படி, நடத்தலில்லாள் -
நடக்காதவளாகிய, (அதாவது : மிருதுவான நடையையும்
நற்குணத்தையுமுடையவளாகிய), அவன் மனைக்கிழத்தி -
அப்பிராமணன் மனைவியானவள், அஞ்சொல் - அழகிய
மொழியைப்பேசும், மதுரையென்று - மதுரையென்று,
உரைக்கப்பட்டாள் - பெயர் சொல்லப்பட்டவள், மகளும் -
அவளுக்குப் புத்திரியும், வாருணியாம் - வாருணியென்னும்
பெயருடையவளாம், (அவன்), கதிர் - பிரகாசம் பொருந்திய, முத்தின்
நக - முத்துக்களைப்போன்ற பற்களையும், கரும் - கருத்த, கண் -
கண்ணையும், செவ்வாய் - சிவந்த வாயையும், கால்பரந்து -
அடிபரந்து, எழுந்த - மார்பிலுண்டாகிய, பொன்னின் - பொன்போலும்,
பிதிர் பரந்திருந்த - தேமல் படர்ந்திருந்த, கொங்கை -
ஸ்தனங்களையும், (உடைய), பிணையனாள் - பெட்டைமான் போன்ற
பார்வை பொருந்தியவளாய், ஒருத்தியானாள் - ஒப்பற்ற
அழகுடையவளானாள், எ-று. (3)
457. கதிர்மறை பொழுதிற் கான்ற கமலமுங் குவளை யும்போல்
மதுரையும் மகளும் வாட மறையவன் மரித்துப் போகி
யெதிர்வரு பிறவி யில்லா ரிடையறா வயோத்தி யாளு
மதிபலன் றனக்குத் தேவி சுமதிக்கு மரிவை யானான்.
(இ-ள்.) கதிர் - சூரியன், மறைபொழுதில் - அஸ்தமிக்கின்ற
காலத்தில், கான்ற - தோன்றிய, (அதாவது : முகம்சாம்பிக்
காணப்பட்ட), கமலமும் - தாமரைப் புஷ்பமும், குவளையும்போல் -
குவளைப் புஷ்பமும்போல, மதுரையும் - (அப்பிராமணன்
பாரியாளாகிய) மதுரையும், மகளும் - புத்திரியாகிய வாருணியும், வாட
- வருத்தமடைய, மறையவன் - மிருகாயணனென்னும் அப்பிராமணன்,
மரித்துப்போகி - இறந்துபோய், எதிர்வரும் பிறவியில்லார் - இனி
வரக்கூடிய பிறவியில்லாமல் மோக்ஷமடைபவர்கள், இடையறா -
இடைவிடாமல் பிறக்கும்படியான, அயோத்தி - அயோத்தியென்னும்
நகரத்தை, ஆளும் - அரசாளும், அதிபலன் தனக்கு -
அதிபலனென்னு மாசனுக்கும், தேவி - அவன் றேவியாகிய, |