நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 213


 

சுமதிக்கும் - ஸுமதியென்பவளுக்கும், அரிவையானான்  - புத்திரியாக
அவதரித்தான், எ-று.                                      (4)

458. இரணிய வதியென் பாள்பே ரிளமயி லனைய சாயல்
    வரிசிலைப் புருவச் செவ்வாய் வல்லிதான் வளர்ந்த பின்னைத்
    தரணிமே லரச ரெல்லாந் தையலைத் தருக வென்னச்
    சுரமைநா டுடைய தோன்றற் றிண்புயந் துன்னு வித்தார்.

     (இ-ள்.)  பேர்   இளமயில்  அனைய  - மிகுந்த இளமையுள்ள
மயிலை   நிகர்த்த,  சாயல்   -   சாயலையும்,  வரி நீண்ட (அல்லது
கட்டுக்களையுடைய),  சிலை   -  வில்லுக்குச் சமானமாகிய, புருவம் -
புருவத்தையும்,  செவ்வாய்  -  சிவந்த வாயையுமுடைய, வல்லிதான் -
புஷ்பக் கொடிபோன்ற  அக்குமாரியானவள்,  இரணியவதியென்பாள் -
இரணியவதியென்று   பெயர்    கூறப்பட்டவளாய், வளர்ந்தபின்னை -
வளர்ந்துயௌவன  வயதை யடைந்தபிறகு, தரணிமேல் அரசரெல்லாம்
- இப்பூமியின்மேலிருக்கும்      இராஜாக்களெல்லாம்,    தையலை -
இக்குமாரியை,    தருகவென்ன     -    (மணஞ்செய்து)   கொடுக்க
வேண்டுமென்று   கேட்கவும்,   (இந்த இரணியவதியின் தாய்தந்தையர்
இவளை),    சுரமை     நாடுடைய    -   ஸுரம்மிய   தேசத்தைச்
சொந்தமாகவுடைய,    தோன்றல்    -      பெருமையிற்    சிறந்த
பௌதனபுராதிபதியான  பூரணசந்திரனுடைய, திண்புயம் - கெட்டியான
புஜத்தை,   துன்னுவித்தார்    - சேரும்படி  செய்தார்கள் (அதாவது :
அவனுக்கு விவாக விதியால் மணஞ்செய்து கொடுத்தார்கள்), எ-று.  (5)

459. போதன புரத்து வேந்தன் பூரசந் திரனுந் தோகை
     மாதனம் புணர்ந்து வந்த வின்பத்து மயங்கு நாளுட்
     காதலாள் மதுரை யந்தக் காவலன் றேவி தன்பான்
     மாதரா ளொருத்தி யானாண் மற்றவ ணீகண் டாயே.

     (இ-ள்.)போதனபுரத்து - அந்தப் பௌ தனபுரத்துக்கு, வேந்தன்
- அரசனாகிய,  பூரசந்திரனும்  -   பூர்ணசந்திரனும்,     தோகை -
ஆண்மயில்போல  சரீரச்சாயலையுடைய ஹிரணியவதியின், மாதனம் -
பெரிதாகிய  ஸ்தனங்களை,   புணர்ந்து - சேர்ந்து, வந்த - வரப்பட்ட,
இன்பத்து - காமசௌக்கியத்தில், மயங்குநாளுள் - கலந்தனுபவிக்கின்ற
காலத்தில்,   காதலாள்   -  முன் பிறப்பில் (ஹிரண்யவதியின் மேல்)
வாஞ்சையை   யுடைத்தானவளாயிருந்த,   மதுரை - மதுரையென்னும்
பிராம்மண ஸ்த்ரீயானவள்,  (இறந்து), அக்காவலன் - அந்தப் பௌதன
புரவரசனுடைய,    தேவி       தன்பால்   -          தேவியாகிய
ஹிரண்யவதியினிடத்தே,   மாதாரளொருத்தியானாள்  - ஒப்பற்றவோர்
புத்திரியாக வவதரித்தாள்,    அவள்   -   அப்புதல்வியானவள், நீ -
நீயேயாகும், கண்டாய் - அறிந்தனையா?, எ-று.

     மற்று - அசை.                                      (6)