நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 215


 

றல் -   செய்வதை,   கண்டாய்  -  நீ  பார்த்தனையா?, (அக்கர்மம்),
அனகனாம்    -   பாவங்களைப்     போக்கும்    பிராமணனாகிய,
உருவந்தன்னை    -     ஆண்ரூபத்தை  (அதாவது : முன் பிராமண
புருஷனாகவிருந்தவனை),  பெண்ணுருவாக்கி  -  பின் ஸ்த்ரீருபமாகச்
செய்து,  அங்கே   மனைவியை  - அப்போது பெண்சாதியாகவிருந்த
மதுரையை,   மகளுமாக்கி  -   மறு ஜன்மத்தில் புத்திரியாகச் செய்து,
மகளையே   - அப்போது அவளுக்குப் புத்திரியாயிருந்த வாருணியை,
மைந்தனாக்கி -   இச்சன்மத்தில் பூர்ணச்சந்திரனென்னும் குமாரனாகச்
செய்ய,  (அவர்கள்),  நினைவினால்  -   சுபாசுப  பரிணாமத்தின்படி,
முடித்து   நின்றார்  - இவ்விதமாகப்   பிறந்து (தங்கள் காரியங்களை
நிறைவேற்றி)   நின்றார்கள்,   நீதி   -   இந்தக் கர்ம பரிணாமத்தை,
கடக்கவல்லார்    -    தாண்ட   வல்லவர்கள்,   (அதாவது : சுத்த
பரிணாமத்தையடைபவர்கள்), யார் - எவர்களிருக்கிறார்கள்? (வீதராக
ஸம்மியக்துவ   சுத்தோபயோகத்தில் சேருபவர்கள் மிகவும் அருமை),
எ-று.                                                  (9)

463. பத்திர பாகு வென்னும் பரமமா முனிவன் பாரி
    லுத்தமன் பாதஞ் சேர்ந்துன் பிதாவின்று முனிவ னாகி
    யித்தல மேத்த நின்றா னெனக்குவந் திதத்தை யோதிச்
    சித்தமெய் மொழிகண் மூன்றுஞ் செறிவித்த குரவ னாவான்.

     (இ-ள்.)  பாரில்   -   இப்பூமியில், உத்தமன் - உத்தமனாகும்,
பத்திரபாகுவென்னும் - பத்திரபாகுவென்று பெயர் கூறப்படுகின்ற, பரம
- உத்கிருஷ்டமாகிய,     மாமுனிவன்     -    மஹாமுனிவனுடைய,
பாதஞ்சேர்ந்து  -  பாதத்தை அடைந்து, உன் பிதா - உனது தகப்பன்,
இன்று   -   இப்போது,   முனிவனாகி   - முனிவானாகி, இத்தலம் -
இப்பூமியிலுள்ளோர்,   ஏத்த   -   ஸ்துதிக்க,   நின்றான் - தபஸைச்
சேர்ந்தனுஷ்டிப்பவனாய் அதில் நிலைபெற்றிருந்தான், வந்து - (அவன்)
வந்து,   எனக்கு   -  என்றனுக்கு, இதத்தையோதி - இதமாகிய தர்ம
வசனத்தைச்  சொல்லி, சித்தம் - எனது மனமும், மெய் - யாக்கையும்,
மொழிகள்    -   வசனமுமாகிய  அந்தக் கரணங்களை, செறிவித்த -
(ஆஸ்ரவங்களில்    செல்ல  வொட்டாமல்    தபத்தில்   அதாவது :
சுத்தோபயோக   ஹேதுவாகிய  சுபோபயோகத்தில்)  சேரும்படியாகச்
செய்த, குரவனாவான் - குருக்களுமாவான், எ-று.               (10)

464. சாந்தமா மதியைச் சார்ந்து தையலா யுனைப் பயந்தாள்
    காந்திதா னாயி னாளக் காவலன் சீய சேனன்
    பாந்தளான் மரித்துப் போகிச் சல்லகீ வனத்துக் கைமா
    வேந்தனாய் முனிய வேட ரிட்டபே ரசனி கோடம்.

     (இ-ள்.)  தையலாய்   -    (என் தாயாகிய)   பெண்மணியே!,
உனைப்பயந்தாள்  -  உன்னைப்பெற்ற தாயானவள், சாந்தமாமதியைச்
சார்ந்து -   சாந்திமதிகளென்னும்    ஆர்யாங்கனையை   யடைந்து,
காந்திதானாயினாள் - ஆரியாங்கனையானாள்,