அக்காவலன் - அவ்வரசனாகிய, சீயசேனன் - ஸிம்மஸேனன்,
(அதாவது : உனக்குக் கணவனும் எனக்குத் தந்தையுமாகியவன்),
பாந்தளால் - சர்ப்பத்தினால், மரித்துப்போகி - இறந்துபோய்,
சல்லகீவனத்து - சல்லகீயென்கிற வனத்தில், கைமா வேந்தனாய் -
மற்றுள்ள யானைகளுக்கெல்லாம் எஜமானாகி, முனிய -
எதிர்ப்பட்டவர்களைக் கோபித்துத்திரிய, (அச்செய்கைக்குத் தக) வேடர்
- அவ்வன வேடர்களினால், இட்ட - (அதற்கு) இடப்பட்ட, பேர் -
பெயரானது, அசனிகோடம் - அசனி கோஷமென்பதாகும், (அதாவது :
அவன் அவ்வனத்தில் பிறந்து எதிர்ப்பட்டவரைக் கோபித்து வேடரால்
இடப்பட்ட அசனி கோடமென்னும் பெயருடன் திரிந்தான்),
எ-று. (11)
465. நாகாந்தத் தென்னைக் காணா மதத்தினா லந்த நாகம்
வேகாந்தத் தாலென் மேலே வெகுளியா லோடி வந்த
தாகாசத் தியானெ ழுந்தே னங்குவந் தென்னைக் காணா
வேகாந்த நெறிபுக் கின்மை கண்டவ னொருவ னொத்தே.
(இ-ள்.) நாகாந்தத்து - பர்வதசிகரத்தில், என்னை - என்றனை,
காணா - பார்த்து, மதத்தினால் - மதத்தினாலே, அந்த நாகம் -
அவ்வியானையானது, வேகாந்தத்தால் - அதிக தீவ்ரத்தோடு, என்மேல்
- என்றன்மேல், வெகுளியால் - கோபத்தினால், ஓடிவந்தது -
விரைந்தோடிவந்தது, (அப்போது), யான் - நான், ஆகாசத்து -
ஆகாசத்திலே,எழுந்தேன் - (ஆகாசச்சாரணத்தன்மை பெற்றிருப்பதால்
உயர) எழும்பி நின்றேன், அங்கு வந்து - அவ்விடம் வந்து, என்னை
- மேலே நின்ற என்றனை, காணா - பார்த்து, ஏகாந்த நெறிபுக்கு -
ஏகாந்த வழியை (அதாவது : ஸ்யாத்வாதமல்லாத) ஏகாந்தவாதமாகிற
மார்க்கத்திலடைந்து, இன்மை கண்டவன் - அதற்கு முட்டாகி
ஒன்றுமில்லாததைப் பார்த்தவனாகிய, ஒருவன் - ஒரு ஏகாந்தவாதியை,
ஒத்து - நிகர்த்து, எ-று. (12)
466. வெங்கதங் கடாவக் கூற்றொத் தென்னைமே னோக்கிற் பார்க்கச்
சிங்கமா புரத்து வேந்தே சீயமா சேன ஒய் நீ
யிங்குவந் தியானை யானாய் பாவத்தா லிதனை விட்டாற்
பொங்கிவீழ் நரகந் தன்னிற் பொருந்தவோ முயற்சி யென்றேன்.
(இ-ள்.) (மேலும்) வெம் - வெப்பம் பொருந்திய, கதம் -
கோபமானது, கடாவ - தன்னைச் செலுத்த, கூற்றொத்து -
இயமனைப்போன்று, என்னை - என்னை, மேனோக்கிற் பார்க்க
மேற்பார்வையாகப் பார்க்க, (அப்போது யான் அதனை நோக்கி),
சிங்கமாபுரத்து - ஸிம்மமஹாபுரத்து, வேந்தே - அரசனே, சீயமாசேன
ஒய் - ஒய் ஸிம்மசேனனென்னும் பெயருடையவனே, நீ - நீ, இங்கு
வந்து - இவ்விடத்தில் வந்து, பாவத்தால் - பாபவினையினுதயத்தால்,
யானையானாய் - யானையாகப் பிறந்தாய், (அவ்வாறாகியும்), இதனை
விட்டால் - இவ்வியானைச் சரீ |