நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 217


 

ரத்தை    விட்டு   நீங்கினால்,  பொங்கிவீழ்  - பெரிதாக உயரத்தில்
எழும்பித் தலைகீழாக  விழுகின்ற,   நரகந்தன்னில்   -   நரகத்தில்,
பொருந்தவோ   -   போய்ப்   பிறப்பதற்கோ,    முயற்கி - மேலும்
செய்வதாகிய   இப்பாப முயற்சி?,   என்றேன் - என்று சொன்னேன்,
எ-று.                                                  (13)

467. அரசனாய்ப் பெரிய வின்பத் தழுந்தக்கண் டக்க ணாலே
     கரியதாய்ப் பெரிய துன்பத் தழுந்தவிக் கானிற் கண்டேன்
     பெரியதோர் பாவத் தாலிப் பிறவியைப் பெரிது மஞ்சித்
     திருவற மருவு யானச் சீயசந் திரனென் றிட்டேன்.

     (இ-ள்.)  (பின்னரும்)  அரசனாய்  - ராஜாவாகியிருந்து, பெரிய
வின்பத்து    -     பெரிதாகிய   ராஜைஸ்வரிய    சௌக்கியத்தில்,
அழுந்தக்கண்ட  அக் கணாலே - நீ மூழ்கியனுபவிக்கக் கண்ட அந்த
நேத்திரத்தாலேயே,   கரியதாய்   -  யானையாகி, பெரிய துன்பத்து -
பெரிதாகிய துக்கத்தில்,  அழுந்த  - மூழ்க, இக்கானில் - இக்காட்டில்,
கண்டேன்   -  (நான்)    பார்த்தேன்,  பெரியது - பெரிதாகிய, ஓர் -
ஒப்பற்ற,  பாவத்தால்   - பாபோதயத்தாலாகிய, இப்பிறவியை - இந்த
விலங்கு  கதியில் யானையாக  விப்படிப் பிறந்திருக்கும் ஜன்மத்திற்கு,
பெரிதும் - மிகவும், அஞ்சி - (பாபபலமென்று) பயந்து, திருவறம் - ஸ்ரீ
ஜின தர்மத்தை,    மருவு    -   சேரக்கடவாயாக,    யான் - நான்,
அச்சீயசந்திரன் -  முன் உனது குமாரனாகிய அச்சிம்மச் சந்திரனாகும்,
என்றிட்டேன் - என்றும் சொன்னேன், எ-று.                  (14)

468. என்றலு மெழுந்த போதத் திறந்தவப் பிறவி தன்னை
    யன்றவ னறிந்து மூர்ச்சித் தருவரை போல வீழ்ந்தான்
    நின்றதோர் படியிற் றேறி நிறைதவன் போல நின்றான்
    சென்றுயா னறத்தைக் கூறச் செவியினைத் தாழ்த்த லோடும்.

     (இ-ள்.)    என்றலும்    -   என்று    சொல்லவும், எழுந்த -
அவனுக்குண்டாகிய,  போதத்து  - பவஸ்மிருதி ஞானத்தால், இறந்த -
முன்னீங்கின,  அப்பிறவி  தன்னை - ராஜாவாயிருந்த அப்பிறப்பினை,
அன்று   - அப்பொழுது,   அவன் - அவ்வியானையாயிருந்த அவன்,
அறிந்து - தெரிந்து, மூர்ச்சித்து - மூர்ச்சை யடைந்து, அருவரை போல
- பெரிய  பர்வதத்தைப்   போல,  வீழ்ந்தான் - பூமியில் விழுந்தான்,
(பின்னர்)  நின்றதோர்  படியில் - (அவன் மனத்தில்) நின்றதாகிய ஓர்
விதகுணத்தினால்,  தேறி   -  தெளிந்து, நிறைதவன்போல - நிறைந்த
தபஸையுடைய   ஒரு  முனிவனைப்போல, நின்றான் - (கோபம் நீங்கி
உபசமபரிணாமத்தையடைந்து)  நின்றான்,   யான் - நான்,  சென்று -
அருகிற்சென்று,  அறத்தை  - தருமத்தை, கூற - சொல்லத் தொடங்க,
செவியினை    -     தனது   காதுகளை,  தாழ்த்தலோடும் - அவன்
தாழ்த்தவும், எ-று.                                        (15)