விய கர்மங்கள், வரும் - வந்து சேர்ந்து ஆத்மனுடன் பந்திப்பதற்கு,
வாயில் - வழியாகிய ஆஸ்ரவமாகும், என்றேன் - என்று சொன்னேன்,
எ-று. (17)
471. அரியதிவ் வுலகின் வென்றோர் திருமொழி யதனைப் பெற்றாற்
பெரியநற் காட்சி ஞான வொழுக்கமா மவற்றிற் பின்னை
வருவினை வாயி லெல்லா மடைக்கமுன் மிடைந்த பாவம்
நிருசரைச் செல்லு மிந்த நெறியைநீ நினைக்க வென்றேன்.
(இ-ள்.) இவ்வுலகின் - இந்த வுலகத்தில், அரியது -
பெறுதற்கருமையானது, வென்றோர் திருமொழி - வீதராகனாகி
காதிகர்மங்களை ஜயித்து சுத்தோபயோகத்தை யுற்ற அரஹந்த
பரமதேவனாலருளிச் செய்யப்பட்ட திவ்யத்துவனியினாலாகிய
பரமாகமமாகும், அதனை - அந்த ஆகமமாகிய சுருதத்தை, பெற்றால்
- ஸ்ரீுதஞானாவரணீய கர்மமுபசமத்தை யடையப்பெற்றுத் தெளிந்தால்,
(அதனால்) பெரிய - பெருமையையுடைய, நற்காட்சி - ஸம்மியக்
தரிசனமும், ஞானம் - அதற்குமேலுண்டாகின்ற ஸம்மியக் ஞானமும்,
ஒழுக்கம் - அவற்றாலாகின்ற ஸம்மியக் சாரித்திரமும், ஆம் -
ஆத்மனுக்கு ஏற்படும், அவற்றில் - அந்த வியவஹார
ரத்னத்திரயத்தால், பின்னை - பிறகு, வரும் - அசுத்த பரிணாமத்தால்
வந்து சேரும், வினை - கருமங்களினது, வாயிலெல்லாம் -
வழிகளாகிய அசுத்தபரிணாமங்களை யெல்லாம், அடைக்க -
வாராமற்றடுக்க (அதாவது : சுத்த பரிணாமமாகிய ஆத்ம பாவனையில்
நிற்க), முன் - அனாதியாக இதற்கு முன், மிடைந்த - அசுத்த
பரிணாமத்தா லாத்மனிடத்தில் அடைந்த, பாவம் - பாப
கருமமெல்லாம், நிருசரைச் செல்லும் - நிர்ஜரையை யடையும், இந்த
நெறியை - இப்படிப்பட்ட நல்வழியை (அதாவது : மோக்ஷ
மார்க்கத்தை), நீ - நீ, நினைக்க - நினைக்கக் கடவாயாக, என்றேன் -
என்றும் சொன்னேன், எ-று. (18)
472. வெருவுறு துன்ப மாக்கும் விலங்கினு ளெழுந்து வீழ்தல்
நரகிடை மருவுந் துன்ப நரர்க்கெலாங் குடும்ப மோம்பன்
மருவிய தேவ லோகின் வழுத்தால் வான வர்க்காந்
துருவமாய் நின்ற துன்பஞ் சொன்னநாற் கதிக்கு மென்றேன்.
(இ-ள்.) விலங்கினுள் - விலங்கு கதியில், வெருவு -
ஸ்வபாவமாகப் பயத்தையே எப்போதும் அடைவது, உறு -
பொருந்திய, துன்பமாகும் - ஸ்வாபாவிகதுக்கமாகும், நரகிடை -
நரகத்திலே, எழுந்து வீழ்தல் - எழும்பித் தலைகீழாக விழுவது,
(நாரகர்களுக்கு) மருவு - சேர்ந்த, துன்பம் - ஸ்வாபாவிகதுக்கமாகும்,
நரர்க்கெலாம் - மனுஷ்யர்களுக்கெல்லாம், குடும்பமோம்பல் -
குடும்பத்தைப் போஷிக்கிறது ஸ்வபாவதுக்கமாகும், தேவலோகின் -
தேவலோகத்தில், மருவிய - அடைந்திராநின்ற, வானவர்க்கு -
தேவர்களுக்கு, வழுத்தால் - இறந்துவிடுவது, |