22மேருமந்தர புராணம்  


 

பமைந்து - அழகமைந்து,  எழுதிய  -  சித்திரக்காரனாலெழுதப்பட்ட,
கொடியனார்  -  புஷ்பக்கொடிபோன்ற  தேவிபரிவாரங்கள்,  வேள்வி
நீர்மையால்   புணர்ந்து   -   விவாக  விதியால்  சேர்ந்து,  அற்பு -
அன்பாகிய,    நீர்   -   ஜலத்தையுடைய,   கடலிடை  -  ஆனந்த
சமுத்திரத்தில், அழுந்து நாளில் - மூழ்குங் காலத்தில், எ-று.     (46)

வேறு.

 47. பூவிற் கொம்பும் புகழும் படிநல் வடிவின்மா
    தேவிப் பட்டம் பெற்றன ளெல்லாந் திருவென்பாள்
    காவிக் கண்ணாள் வதனக் கமலத் தளியாய்மண்
    காவற் கோமா னியலும் நாளாற் கவின்பெற்றாள்.

     (இ-ள்)   பூவிற்கொம்பும்   -   இலக்குமிதேவியும்   (பார்த்து),
புகழும்படி - புகழ்ச்சி செய்யும்படியான, நல் - நன்மையாகிய, வடிவின்
- உருவத்தையுடைய,  எல்லாந்  திருவென்பாள் - ஸர்வஸ்ரீ என்பவள்,
மாதேவிப்பட்டம்    -    மஹாதேவிப்   பட்டத்தை,  பெற்றனள்  -
அடைந்தாள்,    காவி    -    உத்பலம்    போன்ற,  கண்ணாள் -
கண்களையுடைய  அந்த  ஸர்வஸ்ரீயினுடைய,  வதனம்  -  முகமாகிற,
கமலத்து  -  தாமரைப்பூவில்,   அளியாய்  -  வண்டாகி  (அதாவது
தாமரையில்  வண்டு  நெருங்குவதுபோல   அவள்  கண்பார்வையால்
விரும்பி  அவளைச்சேர்ந்து),   மண்காவல்   -  பூமியைக் காக்கின்ற,
கோமான் - அரசன், இயலும் - செல்கின்ற, நாள் - காலத்தில், கவின்-
தக்க  பண்பை,   (அதாவது  கருப்பத்தை),   பெற்றாள்   -  அவள்
அடைந்தாள், எ-று.                                      (47)

 48. முல்லைக் கன்னிக் கொடிமுன் னரும்பைப் பயந்தாற்போற்
    செல்வச் சிறுவற் பயந்தா ளந்தத் திருவன்னாள்
    மல்லிற் பொலிதோண் மன்னன் முன்னாண் மதிகாணா
    வொல்லென் கடல்போ லுவந்திட் டுலகத் திடர்தீர்த்தான்.

     (இ-ள்)  கன்னி - இளமையாகிய,  முல்லைக்கொடி - முல்லைக்
கொடியானது,  முன்  -  முதலிலே, அரும்பை  -  முல்லையரும்பை,
பயந்தாற்போல்   -   பெற்றதுபோல,    அந்தத்    திருவன்னாள் -
இலக்குமிக்குச் சமானமாகிய அந்த ஸர்வஸ்ரீயானவள்,  செல்வச்சிறுவன்
- ஸ்ரீமானாகிய புத்திரனை,  பயந்தாள் - பெற்றாள்,  மல்லில் - மல்ல
யுத்தத்தில்,     பொலி    -    பொலிவுபெற்றிராநின்ற,    தோள் -
புயங்களையுடைய,    மன்னன்   -   அரசனானவன்,   முன்னாள் -
பூர்வபக்கத்து,   மதி - சந்திரனை,   காணா - பார்த்து,  ஒல்லென் -
மகிழ்ச்சியால் ஒல்லென்றொலிக்கின்ற,  கடல்போல் - சமுத்திரம்போல,
உவந்திட்டு - சந்தோஷம்   அடைந்து,   உலகத்து - உலகத்திலுள்ள,
இடர் - வருத்தங்களை, தீர்த்தான் - நீக்கினான், எ-று.

     வருத்தங்களாவன - வறுமையாதி துன்பங்கள்.            (48)