222மேருமந்தர புராணம்  


 

கந்திங்கணோன்பு   - பக்ஷோபவாஸமாஸோபவாஸ  நோன்புகளோடு,
ஒன்றி  - பொருந்தி, சென்றான் - அவற்றின் வழியிலும் ஒழுகினான்,
எ-று.                                                 (23)

477. வாரணந் தின்று விட்ட வற்றிய துவலும் புல்லும்
    பாரணை யாகப் பார்த்தங் கருந்தவம் பயின்று பான்மைக்
    காரண மிதுவென் பான்போற் காலங்கள் பலவு நோற்று
    நீரணைந் தோடும் யூப கேசரி நதியைப் புக்கான்.

     (இ-ள்.)  (பின்னர்   அவன்)    வாரணம்   - இதரயானைகள்,
தின்றுவிட்ட  -   தின்றுவிட்டுக்கழித்த,  வற்றிய - காய்ந்த, துவலும் -
சருகும்,   புல்லும்    -    புல்லும், பாரணையாக - தனக்கு உபவாஸ
முடிந்தவுடன்   உண்பனவாக,  பார்த்து   - சோதித்துண்டு, அங்கு -
அக்காட்டில், அருந்தவம் - அரிதாகிய உபவாஸ தவத்தில், பயின்று -
பழகி,   பான்மைக்காரணம்   -   பவ்வியத்துவம்    ஆஸன்னமாகுந்
தன்மைக்குக்   காரணம், இதுவென்பான்போல் - இந்த அனசனாதியே
யென்று  காட்டுபவன்போல, காலங்கள் பலவும் - இப்படி வெகுகாலம்,
நோற்று   -    இந்த   நோன்பை அனுஷ்டித்து, நீரணைந்து - ஜலம்
மிகுதியாகச்   சேர்ந்து,   ஓடும் -   ஓடுகின்ற, யூபகேசரி - யூபகேசரி
யென்னும்    பெயரையுடைய,    நதியை   - ஆற்றை, சேர்ந்தான் -
அடைந்தான், எ-று.                                      (24)

478. உரையினுக் கரிய வண்ண மொருதிங்க ணோன்பு முற்றி
    வரையினைப் பிழிந்த தேபோல் வற்றிய காயத் தாற்றங்
    கரையினைச் சார்ந்து நீருட் கையினை நீட்டக் கைமா
    நிரையினுக் கரசன் கால்கள் நிலத்திடைக் குளிப்ப நின்றான்.

     (இ-ள்.)(அவ்வாறடைந்த பின்னர்) கைமாநிரையினுக்கு - யானை
சமூகங்களுக்கெல்லாம்,   அரசன்   -   அரச யானையாகிய அவன்,
உரையினுக்கு  - சொல்வதற்கு, அரிய வண்ணம் - அரிதான விதமாக,
ஒரு  திங்கள் - ஒரு மாதம், நோன்பு - உபவாஸ விரதத்தை, முற்றி -
முடிய (அதனை முடித்து), வரையினை - பர்வதத்தை, பிழிந்ததேபோல்
- பிழிந்தது    போல,     வற்றிய    -    வாடின,      காயத்து -
சரீரத்தையுடையவனாகி,   ஆற்றங்கரையினை,    முன்     சொன்ன
நதிக்கரையை,  சார்ந்து - அடைந்து, நீருள் - ஜலத்தில், கையினை -
தனது துதிக்கையை,   நீட்ட    - ஜல பானம் பண்ணும்படியாக விட,
(அப்போது),   கால்கள்    -  தன் பாதங்கள், நிலத்திடை - சேறான
மண்ணில்,  குளிப்ப   - புகுந்துகொள்ள, நின்றான் - அதையெடுக்கச்
சக்தியற்று நின்றான், எ-று.                                (25)

479. அக்கணத் தமைச்ச னாகஞ் சமரமா யதனை விட்டுக்
     குக்குட வடிவிற் பாம்பாய்ப் பிறந்தவக் குபதன் காணா