ஏய - இசைந்த, நல்வினைகள் - புண்ணிய வினைகளும், (ஆய்)
எழுந்த - உண்டாகிய, எல்லாவற்றோடும் - எல்லாவற்றினுடனே,
சென்று - அக்கதியிற்சென்று, பாய - பரந்த, நல் - நன்மையாகிய,
அமளிமேல் - படுக்கை மெத்தையின்மேல், அணிந்துவந்து -
அலங்காராபரணஸஹிதனாகி வந்து, மேயினான் - பொருந்தி நித்திரை
செய்பவனாகிய, ஓர் பார்த்திபன் - ஒரு ராஜகுமாரன், எழுந்ததேபோல்
- நித்திரை தெளிந்து எழுந்திருந்ததைப்போல், வினையினால் - முன்
சொன்ன புண்ணிய வினையினால், முடித்து - தன்னுடைய முன்
ஜன்மத்தை முடித்துவிட்டு (ஹைஜாபாண ஸர்வாங்கோபாங்க
ஸுந்தரனாய் நிறையப்பெற்று), எழுந்தான் - உபபாதசயனத்தினின்றும்
ஷோடஸவர்ஷ யௌவனனாய் அந்தர்முகூர்த்தத்தில் அங்கே)
அவதரித்தான், எ-று. (28)
482. ஆனைதன் னுருவு நீங்கி யிரவிமுற் பிரபைத் தோன்றி
வானத்து வில்லைப் போல வடிவெலாஞ் சமைந்து மூழ்த்திற்
றேனொத்த வலங்க லான்பேர் சீதர னென்ப தாகு
மானொத்த நோக்கி னார்தம் வடிக்கணுக் கிலக்க மானான்.
(இ-ள்.) (மேலும்) ஆனை - அசனிகோடமென்கிற யானை
யரசன், தன்னுருவு - தனது ரூபமாகிய யானைச் சரீரத்தை, நீங்கி -
விட்டு, இரவிமுன் - ரவியென்கிற சப்தத்தை முன்னேயுடைய, பிரபை -
பிரபை யென்கிற, (அதாவது : ரவிப்பிரபை யென்கிற),
தேவவிமானத்தில், தோன்றி - உண்டாகி, வானத்து வில்லைப்போல -
ஆகாசத்தில் இடப்பட்ட இந்திரதனுஸுவைப் போல,வடிவெலாம் - சரீர
வடிவமெல்லாம், மூழ்த்தில் - ஒரு அந்தர் முகூர்த்தத்தில், சமைந்து -
அமைந்து, மானொத்த நோக்கினார் தம் - பெட்டைமான்போல்
மருண்ட பார்வையையுடைய தேவஸ்த்ரீகளது, வடி - கூர்மைபெற்ற,
கணுக்கு - கண்களுக்கு, இலக்கமானான் - பார்த்து மோஹிப்பதற்குக்
குறியானான், தேன் ஒத்த - இனிமை பொருந்திய, அலங்கலான் -
மாலையையணிந்த அத்தேவனுடைய, பேர் - நாமமானது,
சீதரனென்பதாகும் - ஸ்ரீதரனென்று சொல்லப்பட்டதாகும், எ-று. (29)
483. முடியுங்குண் டலமுந் தோடு மாரமுங் குழையும் பூணுங்
கடகமுங் கழலும் பட்டுங் கலாபமும் வீழு நூலு
முடனியல் பாகித் தோன்றி யொளியுமிழ்ந் திலங்கு மேனி
படரொளி பரப்ப மஞ்சிற் பருதியி னிருந்த போழ்தின்.
(இ-ள்.) (அவ்வாறு தோன்றிய அவன்) முடியும் - கிரீடமும்,
குண்டலமும் - கர்ண குண்டலமும், தோடும் - கர்ணத்தோடும்,
ஆரமும் - முத்தாஹார ரத்னாஹாரங்களும், குழையும் - தளிர்களாலும்
புஷ்பங்களினாலும் ஆகிய தெய்லீகம் பொருந்திய வாடாமாலைகளும்,
பூணும் - மற்றுமுள்ள வாபரணங்களும், |