இருபத்திரண்டு கடல்களுக்கு மேல், ஒன்று சென்று - (கல்பாதீதமாகிய
நவக்கிரைவேயகம் ஒன்பது புரை, நவாணுதிசை ஒன்று, பங்சாணுத்தாம்
ஒன்று ஆகிய பதினொரு ஸ்தானங்களுக்கும் ஒவ்வொரு
ஸ்தானத்திற்கு) ஒவ்வொரு கடல் அதிகமாகிச் சென்று, முப்பத்துமூன்று
- பஞ்சாணுத்திரத்திலிராநின்ற தேவர்களுக்கு முப்பத்து மூன்று கடலும்,
ஆயுகம் - உத்கிருஷ்டாயுஷ்யங்களாக, எய்த - அடைய, எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (45)
499. கடற்கோ ராயிரத் தாண்டு கடந்தமிர்
துடற்றும் வெம்பசி தீர மனத்துணா
கடற்கு நாள்பதி னைந்து கழித்துயிர்த்
தடக்க மில்லையின் பத்தரத் தேவரே.
(இ-ள்.) அத்தேவர் - (அக்கல்பங்களிலுள்ள) அத்தேவர்கள்,
கடற்கு - ஒரு கடலாயுஷ்யத்திற்கு, ஓராயிரத்தாண்டு கடந்து - ஆயிரம்
வருஷங்கள் சென்று (அதாவது : ஆயிரம் வருஷம் கழித்து அல்லது
ஆயிரம்வருஷத்துக்கொரு தடவை), உடற்றும் - தங்களை வருத்தும்,
வெம் - வெவ்விய, பசி - பசியானது, தீர - நீங்க, மனத்து அமிர்துணா
- மனத்தினால் தேவாமிர்தத்தைப் புசித்தவர்களாகி (அதாவது :
மனஸாஹார திருப்தர்களாகி), கடற்கு - ஒரு கடலாயுஷ்யத்திற்கு, நாள்
பதினைந்து கழித்து - பதினைந்துதிவசம் அதாவது ஒரு பக்ஷம் கடந்து,
உயிர்த்து - உச்வாஸ நிச்வாஸமுடையவர்களாகி (அதாவது :
மூச்சுவிடக்கூடியவர்களாகி), அடக்கமில் - இந்திரிய
விஷயங்களிலடக்கமில்லாத, இன்பத்தர் - ஸௌக்கியத்தை
யுடையவர்களாவார்கள், (இவைகள் அந்தந்தக் கல்பத்தின் ஆயுஷ்ய
கடல்களின்பிரகாரமாகும்), எ . று.
ஐ - சாரியை; அழகெனினுமாம். (46)
500. எழுமு ழம்முதற் கேழரை வீழ்ந்திடை
யொழிமு ழங்கற்பத் துச்சியின் மூன்றரை
விழுமு ழம்மரை யைந்துடன் வீழ்ந்துமே
லொழிமு ழம்மொன்ற ணுத்தரத் தோக்கமே.
(இ-ள்.) இடை - இத்தேவலோகத்தினிடத்தே இராநின்ற
தேவர்களுக்கு, ஓக்கம் - உன்னதமானது, முதற்கு - ஸௌதர்ம ஈசான
கற்பத்திலிராநின்ற தேவர்களுக்கு, எழுமுழம் - ஏழு முழமும், ஏழு -
அதற்குமேலுள்ள ஏழு யுகளங்களுக்கும், அரை வீழ்ந்து - அரை
அரை முழம் குறைந்து, (அதாவது : ஸநத்குமார மாஹேந்திர
கற்பத்திலிராநின்ற தேவர்களுக்கு ஆறரை முழமும், பிரம்ம
பிரம்மோத்தா கற்பத்தார்களுக்கு ஆறு முழமும், லாந்தவ காபிஷ்டர்க |