நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 233


 

ளுக்கு  ஐந்தரை முழமும், சுக்கிரமஹா சுக்கிரர்களுக்கு ஐந்து முழமும்,
ஸதார   ஸஹஸ்ராரத்தார்களுக்கு   நாலரை    முழமும,     ஆனத
பிராணதகல்பத்தார்களுக்கு   நாலு முழமும், ஆய்) கற்பத்துச்சியின் -
ஆரண  அச்சுத  கல்பத்துத் தேவர்களுக்கு, ஒழிமுழம் - மீந்து நின்ற
முழம்,  மூன்றரை  - மூன்றரையும், மேல் - அதற்கு மேலே, ஐந்து -
(ஹேஷ்டிம,  மத்திம,    உபரிம   பேதத்தால்   நவக்கிரைவேயகப்
பிரிவுமூன்று, நவாணுதிசை ஒன்று, பஞ்சாணுத்தரம் ஒன்றாகிய,  இந்த)
ஐந்து  ஸ்தானங்களுக்கும்,  உடன் - ஒரு தன்மையாக,  விழுமுழம் -
குறையும்   முழமானது, அரை வீழ்ந்து - ஒவ்வொரு ஸ்தானத்துக்கும்
அரை  அரை முழமாகக் குறைந்து (அதாவது : ஹேஷ்டிமத்திரயத்தில்
மூன்று முழமும், மத்திம கிரைவேயகத்திரயத்தில் இரண்டரை முழமும்,
உபரிமகிரைவேயகத்திரயத்தில் இரண்டு முழம், நவாணுதிசையில் உள்ள
தேவர்களுக்கு   ஒன்றரை     முழமும்    ஆய்),   அணுத்தரத்து -
பஞ்சாணுத்தரத்தில்   உள்ள   தேவர்களுக்கு,  ஒழி - மீந்து நின்றது,
முழமொன்று  - ஒரு முழமாகும், (இப்படி வரிசையால் தேவர்களுக்கு
உன்னதம் ஏற்பட்டிருக்கின்றது), எ-று.                      (47)

501. சோதமீ சானர்தம் மேலி ருவர்தம்
    மோதிமண் ணொன்றிரண் டம்மு றையுறும்
    நீதியா னிலங்கீழ் மூன்று நாலைந்தா
    லோதியால் மேலமுன் னால்வ ருணர்வரே.

     (இ-ள்.) சோதமீசானர் -ஸௌதர்ம ஈசான கல்பத்துத் தேவர்கள்,
தம்  -  தங்களுடைய, ஓதி - அவதிஜ்ஞானத்தினால், மண்ணொன்று -
முதல்   நரகபரியந்தமும்,    மேலிருவர்    -    அதற்குமேலிரண்டு
கல்பத்தார்களாகிய   ஸநத்குமார    மாஹேந்திர   தேவர்கள், தம் -
தங்களுடைய,  ஓதி - அவதிஜ்ஞானத்தால், இரண்டு - இரண்டாநரகம்
வரையிலும்,     அம்முறை  - அந்த அவதியின் கிரமத்தால், உறும் -
பொருந்தும்,    (அதாவது :    அறிகின்ற),   மேல   முன்னால்வர் -
அதற்குமேல்    பன்னிரண்டு     கல்பத்தார்களும்,    (நாலு   நாலு
கல்பத்தார்களாக), நீதியால் - வரிசைக் கிரமத்தால், நிலங்கீழ் மூன்று -
(பிரம்ம,    பிரம்மோத்தர,    லாந்தவ, காபிஷ்ட ஆகிய இந்த நாலு
கல்பத்தார்கள்)   கீழான    மூன்றாநரகம் வரையிலும், நாலு - (சுக்கிர
மஹாசுக்கிர   சதாரஸஹஸ்ராரர் ஆகிய இந்த நாலு கல்பத்தார்களும்)
நாலாநரக    பரியந்தமும், ஐந்து - (ஆனதப்பிராணத ஆரண அச்சுத
ஆகிய இந்த நான்கு கல்பதேவர்கள்) ஐந்தாநரக பரியந்தமும், ஓதியால்
- தங்களுக்குண்டாகிய அவதிஜ்ஞானத்தால், உணர்வர் - அறிவார்கள்,
எ-று.

     முதல் ஒதி - இரண்டிடங்களினும் கூட்டப்பட்டது.         (48)

502. ஆற தாவதைக் தேவச்ச மாய்ந்திடு
     மீறி லவ்விரு வர்க்குமே ழாவதாம்.