234மேருமந்தர புராணம்  


 

    மாறி லாச்சவ்வ சித்தியில் வானவ
    ரூறி லாவோதி நாழிகை யுட்கொளும்.

     (இ-ள்.) கேவச்சம் - நவக்கிரைவேயகத்திலிராநின்ற  தேவர்கள்,
ஆறதாவதை    -    ஆறாநரகம்    வரையில்,     ஆய்ந்திடும் -
அவதிஜ்ஞானத்தாலறிந்திடுவார்கள்,   ஈறில்   - அந்தியத்திலிராநின்ற,
அவ்விருவர்க்கும்   -    நவாணுதிசை பஞ்சாணுத்தரத்திலுள்ள அந்த
இரண்டு     பேர்களுக்கும்,     ஏழாவதாம்   - ஏழாநரகபரியந்தமும்
அறியலாகும்,     மாறிலா  - மாறுபாடில்லாத (அதாவது : உண்மைப்
பொருளை    யுணரும்  நேர்மையாகிய), சவ்வசித்தியில் - சர்வார்த்த
சித்தியில் உள்ள, வானவர் - தேவர்கள், ஊறிலா - குற்றமில்லாத, ஓதி
- அவதிஜ்ஞானத்தால்,    உட்கொள்ளும்   - மனத்துட் கொள்கின்ற
(அதாவது :    அறிகின்ற),    நாழிகை   - த்ரஸ நாழிகை பரியந்தம்,
(அறிவார்கள்), எ-று.                                     (49)

503. மிடையின் மேனியைத் தீண்டலிற் காண்டலி
    னடையு மின்சொலிற் சிந்தையின் மேவலின்
    மடநல் லாரின் வரும்பய னெய்துவ
    ரடைவி லோதியிற் சொன்னமுன் னைவரும்.

     (இ-ள்.)  முன் - முதலிலே, அடைவில் - கிரமமாக, ஓதியில் -
அவதிஜ்ஞானத்தில்,  சொன்ன   - சொல்லப்பட்ட,  ஐவரும் - ஐந்து
ஸ்தானத்தார்களும்,   (அதே   வரிசையாக), மிடையில் - (ஸௌதர்ம
ஈசான    கற்பத்துத்    தேவர்கள்    காயப்பிரவீசாரமாகிய)    சரீர
புணர்ச்சியாலும்,     மேனியைத்     தீண்டலில்   -  (ஸநத்குமாரர்,
மாஹேந்திரரிருவரும் ஸ்பரிசப்ரவீசாரமாகிய) சரீரத்தைத் தொடுதலாலும்,
காண்டலின்   - (அதன்மேல் நாலு கல்பத்தார்கள், அதாவது : பிரம்ம,
பிரம்மோத்தர,  லாந்தவ, காபிஷ்ட, தேவர்கள் கண்ணினால் பார்த்துத்
திருப்தியடைவதாகிய)      நேத்திரப்ரவீசாரத்தாலும்,      அடையும்
இன்சொலின்    - (அதன்மேல் சுக்ரமஹாசுக்ர சதாரஸஹஸ்ராரமாகிய
இந்நாற்     கற்பத்தேவர்களும்)         இனியவசனத்தினாலடையும்
வசனப்ரவீசாரத்தாலும்,   சிந்தையின்  மேவலின் - (ஆனதப்பிராணத
ஆரண    அச்சுதமென்னும்    நாலு கற்பத்துத் தேவர்கள்) மனதில்
நினைத்தலாலடையும்     மனப்ரலீசாரத்தாலும்,            மடம் -
அறியாமைத்தன்மையையுடைய,   நல்லாரின்  - தேவஸ்த்ரீகளிடத்தில்,
வரும் - உண்டாகின்ற, பயன் - காமராகத்தினாலாகிய சௌக்கியத்தை,
எய்துவர் - அடைவார்கள், எ-று.                           (50)

504. பல்ல மைந்தின்மேற் பன்னிரண் டாவதை
    யெல்லை யாக விரண்டிரண் டேறிடு
    மல்ல நால்வருக் கேழுமிக் கைம்பத்தைம்
    பல்ல மாந்தேவி யர்ப்பர மாயுவே.