நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 235


 

     (இ-ள்.)   தேவியர்     -    தேவஸ்த்ரீகட்கு,    பரமாயு   -
உத்கிருஷ்டாயுஷ்யமானது,  பல்லமைந்து  -    (ஸௌதர்ம கல்பத்துத்
தேவஸ்த்ரீகளுக்கு)    ஐந்து    பல்லமும்,    மேல் - அதற்குமேலே,
பன்னிரண்டாவதை    -    பன்னிரண்டாங்   கல்பமாகிய ஸஹஸ்ரார
கல்ப்பபரியந்தம், எல்லையாக - அளவாக, இரண்டிரண்டு - ஒவ்வொரு
கல்பத்துக்கு   இரண்டு    இரண்டு பல்லமாக, ஏறிடும் - விருத்தியாகி
அதிகரிக்கும்,   அல்ல   -  அவையல்லாமல், நால்வருக்கு - (ஆனத,
பிராணத,    ஆரண,   அச்சுதமாகிய) இந்நால்வருக்கும், ஏழுமிக்கு -
(ஒவ்வொரு கற்பத்துக்கு) ஏழு ஏழு பல்லமாக அதிகரித்து, ஐம்பத்தைம்
பல்லம்  - (அச்சுத கல்பஸ்த்ரீகட்கு) ஐம்பத்தைந்து பல்லமும், ஆம் -
ஆகும், எ-று.

     ஐந்தின்  என்பதில்,   இன் - சாரியை. ஆவதை என்பதில், ஐ -
சாரியை.                                                (51)

505. மோகமின் முனிவன தின்பம் போலவே
    தோகையை யனையவர் தொடர்ச்சி யின்றியே
    சோகமோ டுறுதுய ரின்றித் தானியல்
    பாகுநல் லகமிந்தி ரத்தவ ரின்பமே.

     (இ-ள்.) நல்  - நன்மையாகிய, அகமிந்திரத்தவர்  - அகமிந்திர
தேவர்களுடைய,   இன்பம்   -    ஸௌக்கியமானது,  மோகமில் -
மோஹனீய    பரிணாமமில்லாத,     முனிவனது  - முனிவரனுடைய,
இன்பம்போல   -     சுகத்தைப்போல,   தோகையை யனையவர் -
ஆண்மயிலுக்குச்  சமானமாகிய சரீரச்சாயலையுடைய தேவஸ்த்ரீகளது,
தொடர்ச்சியின்றியே    -  ஸம்பந்தமில்லாமலே (அதாவது : அவர்கள்
நிஷ்ப்ரவீசாரராகி),    சோகமோடு    -    மனக்கவற்சியுடன், உறு -
அடைகின்ற, துயர் - துக்கங்களும், இன்றி - இல்லாமல், இயல்பாகும் -
ஸ்வபாவமாகிய ஸௌக்கியமேயாகும், எ-று.

     தான் - அசை.                                     (52)

506. சோதமர் சிறுமைச் சோதிட ருத்தம
    மோதிய வரைக்கட லுத்த வுத்தமம்
    நீதியா னிலங்கீழ்மே லவர்க்கு நின்றதா
    மேதமி லிடையன பலவு மாகுமே.

     (இ-ள்.)சோதமர் - ஸௌதர்ம ஈசான கல்பத்தாருடைய, சிறுமை
- ஜெகன்னிய்யாயுஷ்யமானது, சோதிடர் - ஜோதிஷ்க தேவர்களுடைய,
உத்தமம் - உத்தமாயுஷ்யமாகிய   ஒரு    பல்லமாகும்,   நீதியால் -
இவ்வரிசையால்,   நிலங்கீழ் - கீழ்க்கற்பத்தாரின் உத்தமாயுஷ்யமானது,
மேலவர்க்கு - மேல் கல்பத்தாருக்கு, நின்றது - ஜெகன்னிய்யாயுஷ்மாக
நிற்கப்பட்டதாக,    ஆம்   -   ஆகும்,  ஓதிய - (அதுவல்லாமலும்)
அந்தந்தக் கல்பங்களுக்குச் சொல்லப்பட்ட, (உத்கிருஷ்டாயுஷ்