236மேருமந்தர புராணம்  


 

யத்திற்கு  மேலாக),  அரைக்கடல் - அரை அரைக்கடல் ஜாஸ்தியாக,
உத்த வுத்தமம்   - உத்கிருஷ்டோத்கிருஷ்டாயுஷ்யமாகும், ஏதமில் -
குற்றமில்லாத,   இடையன   -  மத்தியாயுஷ்யமானது, பலவுமாகும் -
பலபிரகாரங்களாகும், எ-று.                                (53)

507. இதுவம ருலகுத னியல்பி தன்கணச்
    சதிரமைச் சாசார கற்பத் தின்வழி
    யதிற்பெற வவனரு மத்தி யாயுக
    மதுரநன் மொழிவரு மின்ப மேவினான்.

     (இ-ள்.)    அமருலகுதன்  - தேவலோகத்தினுடைய, இயல்பு -
ஸ்வரூபமானது,     இது    - இத்தன்மையதாகும்,   இதன்   கண் -
இப்படிப்பட்ட இத்தேவருலகத்தில், அச்சதிரமை - அந்த அழகமைந்த,
சாசாரகற்பத்தின்   வழியதில்  -  ஸஹஸ்ராரகல்பத்தில் சூர்யப்பிரபை
யென்கிற விமானத்தில்,   அவன் - அந்த ஸ்ரீதரதேவன், (உற்பவித்து),
அரும் -  அருமையாகிய, மத்தியாயுகம் - மத்திமாயுஷ்யத்தை, பெற -
மேற்கூறிய   கிரமப்படி    அடைய,    (பின்னர் அங்கு முன்னுரைத்
தவாறேயிருந்து   தேவஸ்த்ரீகளின்)   மதுரம் - மாதுரியமாகிய, நன் -
நன்மை    பொருந்திய,  மொழிவருமின்பம் - வசனத்தினாலுண்டாகிய
ஸௌக்கியத்தை  (அதாவது : வசனப்ரவீசார ஸுஹத்தை), மேவினான் -
பொருந்தினான், எ-று.                                    (54)

508. பதினறு கடன்மிசைப் பட்ட வாயுகம்
    பதினறு வருடமா யிரங்க டந்துணா
    பதினறு பதினைநாள் விட்டு யிர்த்திடா
    பதினறு பாவனை யாரைப் பாடுமே.

     (இ-ள்.)  (அங்ஙனம்  இன்பமனுபவித்த இந்த ஸ்ரீதரதேவனுக்கு)
ஆயுகம்   - மேற்கூறிய மத்திமாயுஷ்யமானது, பதினறு கடன்மிசை -
பதினாறு  கடலுக்கு மேல், பட்ட - சிறிது அதிகமாகியதாம், (இவ்வகை
ஆயுஷ்யத்தையுடைய இவன்), பதினறு வருடமாயிரம் - பதினாறாயிரம்
ஸம்வத்ஸரங்களை,   கடந்து - தாண்டி, உணா - உண்டு, (அதாவது :
மனஸாஹாரமுடையவனாய்),   பதினறு      பதினைநாள் - பதினாறு
பக்ஷங்களை, விட்டு - தாண்டி, உயிர்த்திடா - மூச்சுவிட்டு, (அதாவது :
உச்வாஸ நிச்வாஸங்களையுடையவனாகி),   பதினறு பாவனையாரை -
ஷோடசபாவனையை பாவித்து அதனால் தீர்த்தகரநாம மஹாபுண்ணிய
முடையவர்களாகிய       ஜீனேந்திரர்களை,   பாடும்   -    ஸ்துதி
செய்வானாயினான், எ-று.                                 (55)

509. நாலரை முழமியல் பாமோர் மாத்திரை
    மால்வரை யணுவள வாய்நி னைப்புழிச்
    சாலவு நணியவர் போல வெய்தலு
    மாலுறு முருப்பல வாகு மேனியான்.