(இ-ள்.) (இன்னும்) நாலரைமுழம் - நாலரைமுழம், இயல்பாம் -
அந்த ஸ்ரீதரதேவனுக்கு ஸ்வபாவ உன்னதமாகும், ஓர் மாத்திரை -
(அதுவன்றியும்) ஒரு க்ஷணத்தில், (அவன்), மால் - பெரிதாகிய, வரை
அளவாய் - பர்வதத்தின் அளவாகவும், அணுவளவாய் -
அணுவளவாய்ச் சூக்ஷ்மமாகவும், நினைப்புழி - ஒருவர்
நினைக்குமிடத்தில், சாலவும் - மிகவும், அவர்போல - அவரைப்போல,
நணி - பொருந்தி, எய்தலும் - அடைவதும், மாலுறு -
பிரமையடையும்படியான, உருப்பல எய்தலும் - பலவாகிய
ரூபங்களையடைதலும், ஆகும் - ஆகின்ற, மேனியான் -
சரீரத்தையுடையவனாயுமிருந்தான், எ-று.
அளவாய், எய்தலும் என்ற வாக்கியிங்கள் இரண்டிடங்களினும்
கூட்டப்பட்டன. (56)
510. வாசமோ ரோசனை நின்று நாறிடுந்
தேசுமோ ரோசனை சென்றெ றித்திடும்
தூசணி மாசெய்தா மேனி யின்குணம்
பேசலாம் படியது வன்று பீடினால்.
(இ-ள்.) தூசு - வஸ்திரங்களும், அணி - ஆபரணங்களும்,
மாசெய்தா - அழுக்கடையாத (அதாவது : ஒளிமழுங்காத), மேனியின்
- இந்த ஸ்ரீதரதேவனுடைய சரீரத்தின், குணம் - குணமானது
(எப்படிப்பட்டதென்றால் அதிலுள்ள) வாசம் - வாசனையானது,
ஒரோசனை - எப்பக்கங்களிலும் ஒரு யோசனைப்பிரமாணம், நின்று -
வியாபித்து நின்று, நாறிடும் - பரிமளித்துக்கொண்டிருக்கும், தேசும் -
ஒளியும், ஓரோசனை - ஒரு யோசனைப்பிரமாணம், சென்று -
எப்பக்கங்களிலும் வியாபித்து, எறித்திடும் - வீசும், பீடினால் -
இவ்விதமாகிய பெருமைகளினால், பேசலாம் படியதுவன்று - (அது)
வர்ணித்துக்கூற முடிந்ததன்று, எ-று. (57)
511. முன்செய்நல் வினையினான் முகிலின் மின்னனா
ரின்செய் வாயவ ரேந்து கொங்கையர்
வந்திடைச் சூழ்ந்திட வணங்க வானவ
ரந்தமி லின்பத்து ளமரன் மேவினான்.
(இ-ள்.) (இவ்வித பெருமைகளுடனே) முன்செய் - பூர்வத்தில்
செய்யப்பட்ட, நல்வினையினால் - புண்ணியகர்மத்தி னுதயத்தால்,
முகிலின் - மேகத்திலுண்டாகிய, மின்னனார் - மின்னற்
கொடி போன்றவரும், இன்செய்வாயவர் - இனிமையைச் செய்கின்ற
சிவந்த வாயையுடையவரும், ஏந்து - மார்பினிடத்தில் தரித்த,
கொங்கையர் - ஸ்தனங்களையுடையவரும் ஆகிய தேவமாதர்கள்,
வந்து - எப்பக்கங்களிலுமடைந்து, இடை சூழ்ந்திட - தன்னிடத்தே
சூழ்ந்துகொள்ளவும், |