வானவர் - ஸாமான்னிய தேவர்கள், வணங்க - பணியவும், அந்தமில்
- தனதாயுஷ்ய காலம் வரையில் முடிவில்லாத, இன்பத்துள் -
இவ்விதமான தேவஸௌக்கியத்தில், அமரன் - இந்த ஸ்ரீதரதேவன்,
மேவினான் - (மேற் கூறியபடி) பொருந்தினான், எ-று. (58)
512. மந்திரி தமிலனும் மரித்து மால்வனத்
தந்தர மின்றிவா னரம தாகினான்
சிந்துரக் களிற்றின்மேல் செறிந்த வன்பினால்
வெந்துய ரறாவர வத்தை வீட்டினான்.
(இ-ள்.) (ஸ்ரீதரவேதன் அப்படியிருக்க) மந்திரி - (ஸிம்மஸேன
வாசனுக்கு ஸத்தியகோஷ மந்திரிக்குப் பிறகு ஏற்பட்டிருந்த)
மந்திரியாகிய, தமிலனும் - தர்மிலனென்னுமவனும், மரித்து - இறந்து,
மால் - பெரிதாகிய, வனத்து - அந்தச் சல்லகீவனத்தில், அந்தரமின்றி
- விக்கினமின்றி (அதாவது : மரித்தவுடனே), வானரமதாயினான் -
குரங்காகப் பிறந்தான், (அவ்வாறு பிறந்தவன்) சிந்துரம் - முகத்தில்
சிந்தூரத்திலகம் போன்ற புள்ளிகளையுடை, களிற்றின்மேல் -
அசனிகோடமென்னும் யானையின்மேல், செறிந்த - சேர்ந்த,
அன்பினால் - முற்பவத்தாசையினால், வெம் - வெப்பம் பொருந்திய,
துயர் - துன்பங்கள், அறா - நீங்காத, அரவத்தை - அக் குக்குட
ஸர்ப்பத்தை, வீட்டினான் - கொன்றான், எ-று. (59)
513. உரகம்வா னரத்தினா லுயிரி ழந்துபோய்
நாகமூன் றாவதை நண்ணி யெண்ணரும்
பெரியமா துயரம துற்ற தாற்றவும்
விரகினால் வினைகணின் றுதயஞ் செய்யவே.
(இ-ள்.) உரகம் - அக் குக்குடஸர்ப்பமானது, வானரத்தினால் -
முன் சொன்ன குரங்கினால், உயிரிழந்து போய் - அச்சரீரத்தினின்றும்
உயிர் நீங்கிப்போய், நரகமூன்றாவதை - மூன்றா நரகத்தை, நண்ணி -
அடைந்து நரகனாயவதரித்து, விரகினால் - கிரமத்தால், வினைகள் -
பாபவினைகள், நின்று - தங்கிநின்று, உதயஞ் செய்ய - உதயத்தைக்
கொடுக்க, அது - அக் குக்குடஸர்ப்பமாகி முன்னிருந்து இப்போது
நாரகனாய்ப் பூர்வம் ஸ்ரீபூதியாகிய ஆத்மன், எண்ணரும் -
நினைத்தற்கரிய, பெரும் - பெரிதாகிய, மாதுயரம் - மஹாதுக்கத்தை,
ஆற்றவும் - மிகவும், உற்றது - அந்நரகத்தில் அடைந்தது, எ-று. (60)
514. ஒட்டகங் கழுதைநாய் பாம்பு வாசியூ
னிட்டதோர் குழியின்மிக் கெழுந்து நாறிடும்
மட்டிடை வீழ்ந்ததி லமைந்த யாக்கையான்
சுட்டதோர் பனைத்துணிப் போல தூங்கினான். |