நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 241


 

மூர்ச்சையால்     விழுந்து,         துஞ்சினும்         துஞ்சிடா -
மரணமூர்ச்சையடைந்தாலும்    சாகாத,     துயரம்   - இவ்வித நரக
துக்கமானது,   எஞ்சலில்   - குறைவில்லாத, மாக்கடல் - பெரிதாகிய
கடல்களாகிய,  ஆயுகம் - தனதாயுஷ்யத்தில், இரக்க மொன்றிலான் -
நடுவிற்  சாதலிலனாகிய அனப மிருத்தியாயுஷ்யத்தை யுடையவனாய்த்
துக்கிப்பவனானான், எ-று.                                 (66)

520. நின்றுநின் றுடற்றும்வெம் பசியை நோக்குவா
    னொன்றிநின் றவர்நினைந் திட்ட வக்கணஞ்
    சென்றுநஞ் செத்திசை யுஞ்செ றிந்திடா
    பொன்றநின் றுடற்றிடுங் கணந்தொ றும்புகா.

     (இ-ள்.)(மேலும் அவன்) நின்று நின்று - நீங்காமல் எப்போதும்
நின்று,   உடற்றும்   -  வருத்துகின்ற, வெம் - வெப்பம் பொருந்திய,
பசியை    -    பசிநோயை, நோக்குவான்    -   பார்த்து  அதனை
நீக்குபொருட்டு    வருந்துவான்,   (அப்பொழுது), ஒன்றி - பொருந்தி,
நின்றவர்    -  அங்கே   நின்றவர்கள், நினைந்திட்ட  - (அவனுக்கு
ஆகாரத்திற்குப் பதிலாக விஷத்தை ஊட்ட வேண்டுமென்று) நினைந்த,
அக்கணம்   - அதே   சமயத்தில், நஞ்சு - (அவர்களால் இடப்பட்ட)
விஷமானது,   எத்திசையும் சென்று - எப்பக்கத்திலு மடைந்து, புகா -
அவனுட்புகுந்து,   செறிந்திடா   -   நிறைந்து, (அவன் பசி வேதனை
பொறுக்கமாட்டாமல்  அதைப்   புசிக்க), பொன்ற நின்று   - அவன்
பிரஜ்ஞை   தப்பி   மரணாவஸ்தையடைய   நின்று, கணந்தொறும் -
எச்சமயத்திலும்,   உடற்றிடும் - (அவனுக்கு) வேதனையைச் செய்யும்,
எ-று.                                                  (67)

521. முழமிசை முப்பத்தோர் வில்லு யர்ந்தவ
    னெழுமிசைப் புகைமுப்பத் தொன்று காதமும்
    விழுமுடன் வெங்கனல் வெண்ணெய் போன்றுடைந்
    தெழுகடற் றானுமீ தவனி யற்கையே.

     (இ-ள்.)  (பின்னும்)   அவன்   - மூன்றாநரகத்தில்   ஜனித்த
அந்நாரகன், முழமிசை - ஒரு முழம் மேலாகிய, முப்பத்தோர் வில்லு -
முப்பத்தொரு   வில்லு,    (அதாவது : முப்பத்தொன்றேகால் வில்லு),
உயர்ந்து   - சரீர   உன்னத முடையவனாகி, புகைமுப்பத்தொன்று -
முப்பத்தொரு   யோசனையும்,  காதமும் - ஒருகாதமும், (அதாவது :
முப்பத்தொன்றேகால் யோஜனை உயரம்), மிசை - நாகபூமியினின்றும்
மேலே,   எழும்   - எழும்புவான், வெம் - வெப்பமுடைய, கனல் -
அக்கினியிலகப்பட்ட,  வெண்ணெய்போன்று - வெண்ணெயைப்போல்,
உடைந்து - நரகஸந்தாபத்தாலுருகி, உடன் - உடனே, விழும் - தலை
கீழாக     விழுவான்,    எழு    கடல்தானும்   - தனக்குண்டாகிய
ஆயுஷ்யமாகிய ஏழுகடல் பரியந்தம், அவன் - அந்நரகனது, இயற்கை
- ஸ்வபாவ துக்கமானது, ஈது - இதுவாயிருந்தது, எ-று.          (68)