சுந்தர முத்துங் கொம்புங் கொண்டுபின் வணிகன் பூர
சந்திரன் சரணஞ் சார்ந்து சாலவுஞ் சிறப்புப் பெற்றான்.
(இ-ள்.) (அதன் மேல்) தந்தமும் - அந்த
யானைக்கொம்புகளையும், முத்தும் - முத்துக்களையும், கொண்டு -
எடுத்துக்கொண்டுபோய், தனமித்தன்றன்னை - சிம்மமஹாபுரத்திலுள்ள
தனமித்திரன் என்னும் ஒரு வியாபாரியை, கண்டு - பார்த்து, வெந்திறல்
- வெப்பம் பொருந்திய வலிமையையுடைய, வேடன் -
அவ்வேடனானவன், ஈந்து - அவனிடம் கொடுத்து, வேண்டுவ -
தனக்கு வேண்டிய பொருள்களை, கொண்டு - வாங்கிக்கொண்டு,
போனான் - போய் விட்டான், பின் - பிறகு, வணிகன் - அந்த
வியாபாரியானவன், சுந்தரம் - அழகிய, முத்தும் -
அம்முத்துக்களையும், கொம்பும் - கொம்புகளையும், கொண்டு -
எடுத்துக்கொண்டுபோய், பூரசந்திரன் - அந்நகரத்தரசனாகிய
பூர்ணசந்திரனுடைய, சரணம் - பாதங்களை, சார்ந்து - அடைந்து
நமஸ்கரித்து, (அவனிடம் கொடுத்து), சாலவும் - மிகவும், சிறப்பு -
மேம்பாட்டை, பெற்றான் - அடைந்தான், எ-று. (71)
525. பைம்பொனும் மணியும் முத்தும் பவழமும் பயின்ற மஞ்சிற்
கொம்பிரண் டினையும் நாலு கால்களாய்க் கடைந்து கூட்டி
வம்பணி முலையி னார்கள் சூழமற் றதனை யேறிக்
கொம்பிடைப் பிறந்த முத்த மாலைகொண் டணிந்தி ருந்தான்.
(இ-ள்.) (பிறகு) பைம் - பசுமை பொருந்திய, பொனும் -
ஸ்வர்ணமும், மணியும் - அரதனங்களும், முத்தும் - முத்துக்களும்,
பவழமும் - பவளங்களும், பயின்ற - (சேர்த்துச் செய்யப்பட்டபடியால்)
கலந்து தங்கிப்பிரகாசிக்கின்ற, மஞ்சில் - தனது படுக்கைக் கட்டிலில்,
கொம்பிரண்டினையும் - அந்த யானைக் கொம்புகளிரண்டையும், நாலு
கால்களாய் - நான்கு கால்களாக, கடைந்து - கடை சற்பிடித்து
(அதாவது : கடைசல் யந்திரத்தின் வேலையால் விசித்திரமாக ஒழுங்கு
செய்து), கூட்டி - பூட்டி (அதாவது : சேர்த்து), வம்பணி -
ரவிக்கையையணிந்த, முலையினார்கள் - தனங்களையுடைய
ஸ்த்ரீமார்கள், சூழ - சூழும்படியாக, அதனை - அக்கட்டிலில், ஏறி -
ஏறினவனாகி, கொம்பிடை - அந்தக் கொம்பினிடமாக, பிறந்த -
உண்டான, முத்தம் - முத்துக்களை, மாலை கொண்டு - மாலையாகச்
செய்து கைக்கொண்டு, அணிந்து - கழுத்திற் பூண்டு, இருந்தான் -
இருந்தனன், எ-று. (72)
526. இங்கிந்த மாற்றின் றன்மை கேட்டபின் யாரு மில்லைப்
பொங்கிய புலத்தி னீங்கி யறந்தலைப் படாது போவார்
சிங்கவே றனைய காளைக் கிதனைநீ செப்பு தீமைப்
பங்கநல் லறத்தி னாகு மெனப்பணிந் துவந்து போனாள். |