(இ-ள்.) இங்கு - இவ்வுலகத்தில், இந்த - இவ்வாறுண்டாகிய
இந்த, மாற்றின்தன்மை - ஸம்ஸாரத்தினது ஸ்வரூபத்தை, கேட்டபின் -
கேட்ட பிற்பாடு, பொங்கிய - மிகுதியாகிய, புலத்தின் - இந்திரிய
விஷயங்களினின்றும், நீங்கி - விலகி, அறந்தலைப்படாது - தர்ம
ஸ்பரூபத்தில் சேராமல், போவார் - அஞ்ஞானத்தில் செல்பவர்கள்,
யாரும் - எவர்களும், இல்லை - கிடையாது (எப்படிப்பட்டவர்களும்
அஞ்ஞான நீங்கி ஸுஜ்ஞானத்தைப் பெறுவார்கள்; ஆகையால்),
சிங்கவேறனைய - ஆண்சிங்கம் போன்ற பராக்கிரமத்தையுடைய,
காளைக்கு - விட புருஷனாகிய பூர்ணச்சந்திரனுக்கு, இதனை - இந்தச்
சரித்திரத்தை, நீ - நீ, செப்பு - சொல்வாயாக, (அதனால்) தீமை -
பொல்லாங்குகளுக்கெல்லாம், பங்கம் - கெடுதியாகிய, (அதாவது :
பொல்லாங்குகளைக் கெடுத்து நீக்கும்படியான), நல்லறத்தின் - நல்ல
ஸ்ரீஜினதர்மத்தில், ஆகும் - பிரவேசிப்பான், என - என்று
ஸிம்மச்சந்த்ரி முனிவரன் சொல்ல, பணிந்து - இராமதத்தை வணங்கி,
உவந்து - சந்தோஷித்து, போனாள் - போய்விட்டாள், (நகருக்குத்
திரும்பினாள்), எ-று. (73)
527. மாதவன் பாத மேற்றி மனோகர வனத்தி னின்று
மாதரத் தோடும் போகி யரசனாம் மகனைக் கண்டு
காதலுங் களிப்பு நீங்குங் கதையினை யுரைப்பக் கேளா
மேதினிக் கிறைவன் சால வெய்துயிர்த் தவல முற்றான்.
(இ-ள்.) மாதவன் - மஹாதபஸையுடைய ஸிம்மச்சந்திர
முனிவரனுடைய, பாதம் - பாதங்களை, ஏற்றி - உயர்த்திக்கூறி
ஸ்தோத்திரம்பண்ணி, மனோகரம் - மனதுக்குரம்மியமாகிய,
வனத்தினின்றும் - அவ்வனத்தினின்றும், ஆதரத்தோடும் -
ப்ரீதியோடும், போயி - நகரத்திற்போய், அரசனாம் மகனை -
இராஜகுமாரனாகிய பூர்ணசந்திரனை, கண்டு - இராஜமாளிகையில்
பார்த்து, காதலும் - ஆசையும், களிப்பும் - சந்தோஷமும், நீங்கும் -
நீங்கி வைராக்யமுண்டாகும்படியான, கதையினை - (முனிவரனால்
சொல்லக் கேட்ட) அக்கதையை, உரைப்ப - சொல்ல, கேளா -
அதைக்கேட்டு, மேதினிக்கிறைவன் - இப்பூமிக்கு அரசனாகிய
பூர்ணசந்திரன், சால - மிகவும், வெய்துயிர்த்து - வெப்பமாகப்
பெருமூச்செறிந்து, அவலமுற்றான் - வருத்தமடைந்தான், எ-று. (74)
528. மண்ணினுக் கிறைவ னாயு மறத்தினை மறந்து முன்னைப்
புண்ணிய முலர்ந்த போழ்தின் விலங்கிடைப் புக்கு வீழ்ந்தான்
விண்ணினுக் கிறைவ னானான் விலங்கினின் றறத்தை மேவி
யண்ணலுன் றாதை நீயு நல்லதீங் கறிந்து கொள்ளே.
(இ-ள்.) (அதன் மேல் இராமதத்தை அவனை நோக்கி),
அண்ணல் - பெருமையிற் சிறந்த புத்திரனே!, உன் தாதை - உனது
தகப்பனான சிம்மஸேன |