நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 245


 

வரசன்,    மண்ணினுக்கு    -    இப்பூமிக்கு,     இறைவனாயும்  -
இராஜாவாகியிருந்தும்,   அறத்தினை    -    ஸ்ரீஜின   தருமத்தினது
ஸ்வரூபத்தை,   மறந்து  - அறியாமல் மறந்து, முன்னைப்புண்ணியம் -
பூர்வபுண்ணியமானது, உலர்ந்தபோழ்தில் -காய்ந்து நீங்கின காலத்தில்,
விலங்கிடைப்புக்கு   - திரியக்கதியில் அடைந்து, வீழ்ந்தான் - வீழ்ந்து
யானையாகப்   பிறந்தான்,   விலங்கினின்று - அந்த விலங்கு கதியில்
யானையாக    இருந்து,    அறத்தை   மேவி - ஸ்ரீஜின தருமத்தைப்
பொருந்தி,   விண்ணினுக்கு  - தேவலோகத்துக்கு, இறைவனானான் -
எஜமானானான்,   நீயும்  -  நீயும், ஈங்கு - இவ்விடத்தில், நல்லது -
நன்மையின்னதென்பதை,   அறிந்துகொள் - தெரிந்து கொள்ளவாயாக,
எ-று.                                                  (75)

529. இலங்கொளி மகுடஞ் சூடி யிருநிலக் கிழவ னாயும்
    புலங்கண்மேற் புரிந்தெ ழுந்து விலங்கிடைப் புரிந்து வீழ்ந்தான்
    விலங்கிடைப் புலங்க டம்மை வெறுத்துவிண் ணுலகிற் சென்றா
    னலங்கலந் தாரி னாய்நீ பறிந்துகொ ணல்ல தென்றாள்.

     (இ-ள்.) இலங்கும்  - விளங்கும், ஒளி - பிரகாசம் பொருந்திய,
மகுடம் - கிரீடத்தை, சூடி - தரித்து, இரு நிலம் - பெரிதாகிய பூமிக்கு,
கிழவனாயும் - உரிய அரசனாயிருந்தும், (அம்மன்னன்), புலங்கள்மேல்
- பங்சேந்திரிய   விஷயங்கள்மேல்,   புரிந்தெழுந்து   -  மிகுதியாக
விரும்பிச் சென்று, புரிந்து - (அவ்விஷயங்களைச்) செய்து, விலங்கிடை
- திரியக்காகிய   பிறவியில்,   வீழ்ந்தான்  - (மேற்கூறியபடி) வீழ்ந்து
யானையாய்ப்   பிறந்தான்,   விலங்கிடை  - அந்த யானைப்பிறப்பில்,
புலங்கடம்மை   -  இந்திரிய விஷயங்களை, வெறுத்து - வெறுப்புற்று
நீக்கி       வைராக்கியமடைந்து,    விண்ணுலகிற்     சென்றான் -
தேவலோகத்தை    யடைந்தான்,   அலங்கல்  - அசைகின்ற, அம் -
அழகிய,   தாரினாய்  - மாலையையணிந்திராநின்ற அரசனே!, நீ - நீ,
(இதனால்)   நல்லது  -  நன்மையான ஸ்வரூபத்தை, அறிந்துகொள் -
தெரிந்துகொள்,   என்றாள்  - என்று இருமுறை அதனை வற்புறுத்திச்
சொன்னாள், எ-று.                                       (76)

530. பற்றினாற் பூதி பாம்பாய்ச் சமரமாய்க் கோழிப் பாம்பாய்ச்
    செற்றத்தாற் றீயில் வெம்பு நரகத்தைச் செறிந்து நின்றான்
    கொற்றவேற் குமர நீயிப் பிறவியைக் குறுக வஞ்சிற்
    செற்றமும் பற்று நீங்கித் திருவறம் புணர்க வென்றாள்.

     (இ-ள்.)   (அவ்வாறு   கூறிப்   பின்னரும்)   பூதி  - ஸ்ரீபூதி
மந்திரியானவன்,   பற்றினால்   - பிற பொருளாசையாகிற ராகத்தால்,
(இறந்து),   பாம்பாய்  - அகந்தன ஸர்ப்பமாகி, (இறந்து), சமரமாய் -
(பிறகு)   சமரீ   மிருகமாகி,    கோழிப்பாம்பாய்   - (அதன் பின்பு)
கோழிப்பாம்பாகி,  செற்றத்தால் - அரசன்மேல் வைத்த துவேஷத்தால்
(அதாவது :   அனந்தானுபந்திக்   குரோதத்தால்  அவ்வரசன் எடுத்த
ஜன்ம