248மேருமந்தர புராணம்  


 

கழுமல்    -  (மோகித்து    ஹேயோபாதேய    விஞ்ஞானமின்றிப்)
பொருந்துதலும்,    மலையனைய    -  பர்வதம்போன்ற (அதாவது :
மலையைப்போல் அதிகரித்த), செல்வம் - ஐசுவரியப்பற்றுதலும், மாயம்
- மாய்கை     பொருந்திய,    நரகத்து   - நரகத்திலே, வீழ்க்கும் -
(அப்பற்றுதலுடையவர்களை)     விழப்பண்ணி     நாரகராக்கிவிடும்,
மலைவிலா      -   மாறுபாடில்லாத    யதோக்தமாகிய, நெறியை -
ஸன்மார்க்கத்தை  (அதாவது : தத்துவார்த்த சிரத்தான ஞானாதிகளை),
விட்டு  - விலகி, மயங்கினார் நெறியை - மயக்கமடைந்தவர்களுடைய
வழியை,   (அதாவது :   அயதாக்கிரஹணார்த்தமாகிய   மித்தியாத்வ
நெறியை), பற்றின் - அஞ்ஞானோ தயத்தால் சேர்ந்தால், நிலையிலா -
அனித்தியஸ்வரூபமாகிய,  மாற்றில்  - ஸம்ஸாரத்தில், நின்று - தீர்க்க
காலம்   நின்று,   சுழறற்கு  - ஜனன மரணாதி துக்கங்களையடைந்து
சுழல்வதற்கு,     நிமித்தம்    - காரணமாகும்,   என்றான்  - என்று
அப்பூர்ணச்சந்திரவரசன்   தனக்குத்   தானே சொல்லிக்கொண்டான்,
எ-று.                                                  (81)

535. அஞ்சினான் மாற்றைச் சால வடங்கினான் புலங்க டம்மை
     நஞ்சையே போலு மென்று நடுங்கினான் றொடங்கல் செய்யான்
     வஞ்சமும் படிறும் பற்றுஞ் செற்றமுங் களிப்பு மாற்றிப்
     பஞ்சணு வதங்க ளோடு சீலங்கள் பயின்று சென்றான்.

     (இ-ள்.)   (அவ்வாறு   சொல்லி)  மாற்றை  - இந்த  ஸம்ஸார
ஸ்வரூபத்தை, (அனித்தியமென்றும் துக்ககாரணமென்றும்), அஞ்சினான்
- பயந்தவனாகியும்,   புலங்கடம்மை  -  பஞ்சேந்திரிய விஷயங்களை,
(இவை)   சால  - மிகவும், நஞ்சையே போலுமென்று - விஷத்துக்குச்
சமானமாகுமென்று,   நடுங்கினான்  - அவற்றிற்குப் பயந்தவனாகியும்,
தொடங்கல்  செய்யான் - (அவ்விஷயாரம்பக் கிரியைகளை) ஆரம்பம்
செய்யானாகியும் (அதாவது : அனாரம்ப விஷயனாகி), அடங்கினான் -
விஷய  ஸம்யமனாகியும், வஞ்சமும் - கபடமும், படிறும் - பொய்யும்,
பற்றும்   -    ஆசையும்,   செற்றமும்   - த்வேஷமும், களிப்பும் -
சந்தோஷமு       மாதியாகியவைகளை,    மாற்றி     -     நீக்கி,
பஞ்சணுவதங்களோடு  - பஞ்சாணு விரதங்களோடும், சீலங்கள் - சீல
சப்தகங்களையும்,   பயின்று   - சேர்ந்து, சென்றான் - அனுஷ்டித்து
அவற்றின் வழியிலே பிரவேசித்தான், எ-று.                   (82)

536. சித்தமெய் மொழிகண் மூன்றிற் சினவான் செழும்பொற் பாதம்
    மத்தகத் தணிந்து நான்கு மங்கலம் பயின்று வையத்
    துத்தமர் தம்மை யேத்திச் சரணம்புக் குயிரை யோம்பித்
    தத்துவம் பயின்று தானந் தவத்தொடு தயாவிற் சென்றான்.

     (இ-ள்.)(மேலும்) சித்தம் - மனதும், மெய் - சரீரமும், மொழிகள்
- வசனமுமாகிய,  மூன்றில்   - மனவாக்காய வந்தக்கரணங்களினால்,
சினவரன் -