வையகம் - இந்த உலகிலுள்ளோர்,
ஏத்த - தோத்திரம் பண்ண,
வளர்ந்த நாள் - வளர்ந்த காலத்தில், எ-று. (53)
வேறு.
54. புண்ணிய முதித்துழிப் போக மெய்துமா
லண்ணல்சஞ் சயந்தனற் குமர னாயுழி
விண்ணுறை திருவனாள் வேள்வி நீர்மையாற்
பண்ணமை மொழியளோர் பாவை யெய்தினாள்.
(இ-ள்) புண்ணியம் - பூர்வத்தில்
செய்யப்பட்ட புண்ணியமானது,
உதித்துழி - தோன்றிய காலத்தில், போகம் -
போகோப போக
சௌக்கியம், எய்தும் - அடையும் (அதுபோல்),
அண்ணல் -
பெருமையிற் சிறந்தவனாகிய, சஞ்சயந்தன் - சஞ்சயந்தனானவன், நல் -
நன்மையாகிய, குமரனாயுழி - யௌவனகுமாரனான காலத்தில், வேள்வி
நீர்மையால் - ஒளபாஸன விதிக்கிரமத்தால்,
விண்ணுறை -
தேவலோகத்தில் வசிக்கும்படியான, திருவனாள் -
இலக்குமிக்குச்
சமானமுள்ளவளாகிய, பண்ணமை -
கீதமமைந்த, மொழி -
வசனத்தையுடைய, ஓர் - ஒப்பற்ற, பாவையள் - சித்திரப்பாவைபோன்ற
மாதானவள், எய்தினாள் - (அவனை) அடைந்தாள், எ-று.
ஆல் - அசை. (54)
55. வண்டுபூ மலர்ந்துழி மதுவை யுண்பதிற்
றொண்டைவா யவணலம் பருகு நாளவன்
வண்டிரை வலம்புரி மணியை யீன்றவா
புண்டவழ் வேற்கணாள் புதல்வற் பெற்றனள்.
(இ-ள்) பூ - பூவானது, மலர்ந்துழி
- மலர்ந்த விடத்தில், மதுவை
- அதிலுள்ள மதுவை, வண்டு -
வண்டானது, உண்பதின் -
உண்பதுபோல், தொண்டை - கோவைக்கனிபோன்ற, வாய் - (சிவந்த)
வாயையுடைய, அவள் - அந்த ஸ்த்ரீயினிடத்துண்டாகிய,
நலம் -
இன்பத்தை, அவன் - அந்தச் சஞ்சயந்த குமாரனானவன், பருகுநாள் -
அனுபவிக்கும் காலத்தில், வண் - வளப்பம் பொருந்திய,
திரை -
அலைகளையுடைய(கடலிலுண்டாகிய), வலம்புரி - வலம்புரிச் சங்கானது,
மணியை - முத்துமணியை, ஈன்றவா - பெற்றதுபோல், புண் - பகைவர்
மாம்சத்திலே, தவழ் - பாய்ந்து தவழ்கின்ற, வேல் - வேல்போன்ற,
கணாள் - கண்களையுடைய அம்மாது, புதல்வன் - ஒரு புத்திரனை,
பெற்றனள் - பெற்றாள், எ-று. (55)
|